மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சிறிலங்கா இராணுவத் தளபதி, இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளருக்கு எதிராக குற்றவியல் வழக்கு?

பல முக்கிய கொலை வழக்குகள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கத் தவறினால், சிறிலங்கா இராணுவத் தளபதி மற்றும் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக, குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்வது குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆலோசித்து வருகிறது.

மீறல்களை ஒப்புக்கொண்ட சிறிலங்கா கடற்படை அதிகாரி மீது இராணுவ நீதிமன்ற விசாரணை

சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள், ஆட்கடத்தல்களில் ஈடுபட்டது மற்றும் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவியது தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சாட்சியமளித்த கடற்படை உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராக சிறிலங்கா கடற்படை இராணுவ நீதிமன்ற விசாரணையை நடத்தவுள்ளது.

மைத்திரி பங்கேற்ற விழாவில் நடந்த தீவிபத்து – முன்னாள் அரச புலனாய்வுத் தலைவரிடம் விசாரணை?

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற அம்பாந்தோட்டையில் சங்கிரி-லா நட்சத்திர விடுதி திறப்பு விழாவில் இடம்பெற்ற தீவிபத்துத் தொடர்பாக உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – சிறிலங்கா அரசு அறிவிப்பு

பொறுப்புக்கூறுவதற்கான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறுவதை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று சிறிலங்காவின் தொழிற்பயிற்சி மற்றும் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இந்திய மீன்பிடிப் படகுகளை விடுவிக்க முடியாது – சிறிலங்கா திட்டவட்டம்

சிறிலங்கா கடற்பரப்புக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சீனத் தூதுவரைச் சந்தித்தார் சம்பந்தன்

சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங்குடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் உறவுகளை வலுப்படுத்துகிறது ஐதேக

ஐதேக பொதுச்செயலரும் அமைச்சருமான கபீர் காசிம் நேற்று பீஜிங்கில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அனைத்துலக திணைக்களத் தலைவர் சொங் தாவோவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது பங்களாதேஸ் போர்க்கப்பல்

சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மற்றொரு தொகுதி உதவிப் பொருட்களை, ஏற்றிக் கொண்டு பங்களாதேஸ் கடற்படைக் கப்பல் ஒன்று நேற்றுமாலை கொழும்பு நோக்கிப் புறப்பட்டுள்ளது.

தடைவிதித்தது முப்படைத் தளபதிகள் தான் – நழுவுகிறார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சம்பூர் விவகாரம் தொடர்பாக தாம் உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கவில்லை என்றும், கிழக்கு முதல்வர் பங்கேற்கும் நிகழ்வுகளைப் புறக்கணிக்கும் முடிவை முப்படைகளின் தளபதிகளே எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி.

கிழக்கு முதல்வர் மன்னிப்புக் கோரியதால் தான் தடை நீக்கம் – சிறிலங்கா கடற்படை பேச்சாளர்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் மன்னிப்புக் கோரியதையடுத்தே, கடற்படை முகாம்களுக்குள் நுழைவதற்கு அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.