மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாளுக்கு தடைகோருகிறது சிறிலங்கா காவல்துறை

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, சிறிலங்கா காவல்துறையினரால், யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய பொதுச்சின்னத்தில் போட்டியிட கூட்டமைப்பு, ஈபிடிபி அல்லாத கட்சிகளை அழைக்கிறார் விக்கி

ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் – தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுதி உள்ள எல்லோரையும் ஒன்றிணைக்கும் வகையில், தமிழ் மக்கள் கூட்டணியின் கீழ் போட்டியிட-  தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே நிற்கும், ஈபிடிபி தவிர்ந்த மற்றைய தமிழ்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்  தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம்,  க.வி.விக்னேஸ்வரன்.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து நாளை விக்கியின் கட்சி ஆலோசனை

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நாளை கூடி ஆராயவுள்ளது.

வடக்கில் சிறிலங்கா காவல்துறையினரின் விடுமுறைகள் ரத்து

வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் அனைத்து சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளினதும், விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ் மக்கள் கூட்டணி – புதிய கட்சியை அறிவித்தார் விக்கி

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி (ரிஎம்கே) என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளார்.

புதிய மாகாண கீதம் அறிமுகம், சர்ச்சைகளுடன் நிறைவடைந்த இறுதி அமர்வு

வடக்கு மாகாண சபையின் ஐந்தாண்டு பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் முடிவடையவுள்ள நிலையில் இன்று நடந்த கடைசி அமர்விலேயே வடக்கு மாகாண சபையின் கீதத்துக்கு சபையின் அங்கீகாரம் பெறப்பட்டது.

வடக்கு மாகாண சபை நாளையுடன் காலாவதி – இன்று கடைசி அமர்வு

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இன்று அவையின் கடைசி அமர்வு இடம்பெறவுள்ளது.

‘அம்மாச்சி’யை அழிக்கக் கங்கணம் – 25 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்குகிறது சிறிலங்கா அரசு

வடக்கு மாகாண சபையினால் ஆரம்பிக்கப்பட்ட ‘அம்மாச்சி’ உணவகத்தின் பெயரை மாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய கட்சியைத் தொடங்கினார் அனந்தி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு, வடக்கு மாகாண சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட  அனந்தி சசிதரன் இன்று யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நிமலராஜனின் 18 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின், 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.