மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

தெற்காசிய புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களின் முக்கிய மாநாடு புதுடெல்லியில் இன்று ஆரம்பம்

தீவிரவாத முறியடிப்புக்கான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பாக தெற்காசிய நாடுகளின் புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களின் முக்கிய மாநாடு புதுடெல்லியில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

புனேயில் கைதான யாழ். இளைஞர் கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டார்

போலி இந்தியக் கடவுச்சீட்டு மூலம் ஜேர்மனிக்குச் செல்ல முயன்ற போது, புனே, லொஹேகான் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சுதன் சுப்பையா என்ற தமிழர், கொழும்புக்கு நாடுகடத்தப்பட்டார்.

பிரித்தானியாவுக்கு மாற்றப்படுகிறார் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா, பிரித்தானியாவுக்கான இந்தியத் தூதுவராக நியமிக்கப்படலாம் என்று புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பதியில் சிறிலங்கா அதிபரை நிர்க்கதியாக நிற்க விட்ட சாரதி

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் நேற்று வழிபாடு நடத்தச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கார் சாரதி காணாமற்போனதால், 12 நிமிடங்களுக்கு மேலாக காரில் காத்திருக்க நேரிட்டது.

றோவின் முகவராகச் செயற்பட்டார் மாத்தயா – புதிய நூலில் வெளியாகியுள்ள தகவல்கள்

விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மாத்தயா எனப்படும் கோபாலசாமி மகேந்திரராஜா, இந்தியாவின் வெளியகப் புலனாய்வுப் பிரிவான றோவின் முகவராகச் செயற்பட்டிருந்தார் என்று, இந்திய ஊடகவியலாளர் நீனா கோபால் எழுதி, வெளியாகியுள்ள நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் பாரிய எரிவாயு முனையத்தை அமைக்கும் முயற்சியில் இந்திய நிறுவனம்

சிறிலங்காவில் திரவ இயற்கை எரிவாயு முனையம் ஒன்றை நிறுவும் முயற்சிகளில் இந்தியாவின் பெட்ரோநெட் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக, அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரபாத் சிங் தெரிவித்துள்ளார்.

சம்பூர், பலாலி, காங்கேசன்துறை திட்டங்கள் குறித்து இந்தியா- சிறிலங்கா அமைச்சர்கள் பேச்சு

பலாலி விமான நிலைய அபிவிருத்தி மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக, இந்தியாவும், சிறிலங்காவும் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீபாவளிக்கு முன்னர் இந்தியா- சிறிலங்கா இடையே எட்கா உடன்பாடு

எதிர்வரும் ஒக்ரோபர் 30ஆம் நாள் கொண்டாடப்படவுள்ள தீபாவளிக்கு முன்னதாக, இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில், எட்கா எனப்படும், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு கையெழுத்திடப்படவுள்ளது.

திருகோணமலை – மதவாச்சி இடையே புதிய தொடருந்து வழித்தடம் – இந்தியா ஆர்வம்

திருகோணமலையில் இருந்து மதவாச்சிக்கு புதிய தொடருந்து வழித்தடம் ஒன்றை உருவாக்குவதில், இந்தியா ஆர்வம் கொண்டிருப்பதாக, பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் எட்கா உடன்பாடு – இந்திய, சிறிலங்கா அமைச்சர்கள் இணக்கம்

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டை (எட்கா) செய்து கொள்வது தொடர்பாக, விரைவாக பேச்சுக்களை நடத்தி, இந்த ஆண்டு இறுதிக்குள், முடிவை எட்டுவதற்கு, இந்தியாவும் சிறிலங்காவும் இணங்கியுள்ளன.