மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

சிறிலங்காவுக்கு 8 நீர்த்தாங்கிகள், 100 மெட்றிக் தொன் அரிசியை வரட்சி நிவாரணமாக அனுப்பியது இந்தியா

நான்கு பத்தாண்டுகளில் மோசமான வரட்சியைச் சந்தித்துள்ள சிறிலங்காவுக்கு, குடிநீர் விநியோகத்துக்கான நீர்த்தாங்கிகளையும், அரிசியையும் இந்தியா வழங்கியுள்ளது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

கொச்சி துறைமுகத்தில் சிறிலங்கா போர்க்கப்பல்கள்

சிறிலங்கா கடற்படையின் இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் நான்கு நாட்கள் பயணமாக இந்தியாவின் கொச்சி துறைமுகத்துக்கு வந்திருப்பதாக இந்திய கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகள் – ஒப்பீடு செய்ய இந்திய அமைச்சர் மறுப்பு

சிறிலங்காவுக்கு இந்தியா 2.6 பில்லியன் டொலரை  அபிவிருத்திப் பங்களிப்பாக வழங்கியுள்ளது என்று இந்தியாவின் வெளிவிவகார இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

துருவ் உலங்குவானூர்திகளை விற்பது குறித்து சிறிலங்காவுடன் இந்தியா பேச்சு

இந்தியா தனது உள்நாட்டு தயாரிப்பான துருவ் இலகு உலங்குவானூர்தியை சிறிலங்காவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்த பேச்சுக்களை நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா உள்ளிட்ட16 நாடுகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளது இந்தியா

சிறிலங்கா உள்ளிட்ட 16 நாடுகளுடன் இந்த ஆண்டில் இந்தியா கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக, இந்தியாவின் பாதுகாப்பு இணை அமைச்சர் சுபாஸ் பாம்ரே தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது – சுஸ்மா ஸ்வராஜ்

போரின் போது, நிராயுதபாணிகளான தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா படையினர் இழைத்ததாக குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக இந்தியா கவலையையும், வலியையும் உணர்கிறது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் – இணை அனுசரணைக்கு பின்னடிப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா முடிவு செய்திருப்பதாகவும், எனினும், இந்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்காது என்றும் புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லியில் பிம்ஸ்ரெக் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் முக்கிய கூட்டம்

பிம்ஸ்ரெக் எனப்படும், வங்காள விரிகுடா நாடுகளின், பலதுறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் முதல் கூட்டம் இன்று புதுடெல்லியில் இடம்பெறுகிறது.

புதுடெல்லியில் நாளை ஆரம்பமாகும் தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கில் ரணில், சம்பந்தன் உரை

புதுடெல்லியில் நாளை ஆரம்பமாகவுள்ள தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர்.

விசாரணையை துரிதப்படுத்துமாறு சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கச்சதீவு கடலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுத்துள்ளது.