இலங்கை குறித்த விவாதம் – ஏமாற்றியது ஜெனிவா
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில், இன்று நடைபெறவிருந்த சிறிலங்கா தொடர்பான பூகோள காலமீளாய்வு விவாதம், பிற்போடப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில், இன்று நடைபெறவிருந்த சிறிலங்கா தொடர்பான பூகோள காலமீளாய்வு விவாதம், பிற்போடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள 13 ஈழத் தமிழர்களுக்கும் எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு நேற்று முடிவடைந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் நாள் அறிவிக்கப்படும்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவராகப் பணியாற்றிய ஸ்டீபன் ராப் ஜெனிவாவில் இன்று நடைபெறும், பக்க நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் பற்றிய கருத்துக்களை வெளியிடவுள்ளார்.
சிறிலங்காவில் அமைதி, நல்லிணக்கம், அரசியல் உறுதிப்பாடு, மனித உரிமைகள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலில் மெதுவான முன்னேற்றங்களே காணப்படுவது குறித்து கனடா ஏமாற்றமடைந்துள்ளது என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா பிரிலான்ட் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் மேரி கத்தரின் பீ தெரிவித்துள்ளார்.
லண்டனில் சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தியதை பிரித்தானிய அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்றும், அவரை கொழும்பு திரும்புமாறு உத்தரவிடப்பட்டதாகவும் பிரித்தானியா அமைச்சர் மார்க் பீல்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.
பணச்சலவை செயற்பாடுகள் குறித்த ஆபத்துக் கொண்ட, நாடுகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் கருப்புப் பட்டியலில் சிறிலங்காவும் சேர்க்கப்பட்டுள்ளது.
லண்டனில் புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய சிறிலங்கா இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, இரண்டுவார காலத்துக்குள் திருப்பி அழைக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் சிறிலங்காவிடம் வலியுறுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பணியாற்றும், சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர், தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்த புலம்பெயர் தமிழர்களுக்கு சைகை மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
சுவிற்சர்லாந்தில் அடைக்கலம் தேடுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளதாக, சுவிஸ் அரச குடிவரவுச் செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.