மேலும்

செய்தியாளர்: ஐரோப்பியச் செய்தியாளர்

ருமேனியாவில் பிடிபட்ட 5 சிறிலங்கா இளைஞர்கள் சேர்பியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர்

சட்டவிரோதமாக ருமேனியாவுக்குள் நுழைந்த சிறிலங்காவைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள், சேர்பியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

மூன்று மாதங்களில் 146 இலங்கையர்கள் சுவிசில் அடைக்கலம் கோரி விண்ணப்பம்

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம், சுவிற்சர்லாந்தில் அடைக்கலம் கோரி, 146 இலங்கையர்கள் விண்ணப்பித்திருப்பதாக  அந்த நாட்டின் குடியேற்றச் செயலகம் தெரிவித்துள்ளது.

பாரீசில் சிறப்புற நடந்த கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு (ஒளிப்படங்கள்)

ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், எழுத்தாளரும், சமூக அக்கறையாளரும், புதினப்பலகை நிறுவக ஆசிரியருமான மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது.

பெல்ஜியம் விமான நிலையம், தொடருந்து நிலையத்தில் குண்டுகள் வெடித்து 30 பேர் வரை பலி

பெல்ஜியம் தலைநகர் பிரசெல்சின் சவென்ரெம் அனைத்துலக விமைான நிலையத்திலும், மெட்ரோ தொடருந்து நிலையத்திலும் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 30 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவங்களில் இலங்கையர்களுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

‘நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள்’–நூல் வெளியீடு

நோர்வேயில் ஈழத்தமிழர் புலம்பெயர் வாழ்வியலின் 60 ஆண்டுகள் நிறைவில் ’நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள்’எனும் தலைப்பிலமைந்த நூல்-,தமிழாசிரியர், கவிஞர், சமூக ஆர்வலராக நோர்வேத் தமிழர்களுக்கு அறியப்பட்ட உமாபாலன் சின்னத்துரை அவர்களால் எழுதப்பட்டு வெளிவந்துள்ளது.

மூத்த சமூக -அரசியற் செயற்பாட்டாளர் சிவராஜா : நோர்வே தமிழ்3 இனால் மதிப்பளிப்பு

மூத்த சமூக -அரசியற் செயற்பாட்டாளரான சிவராஜா கணபதிப்பிள்ளை, நோர்வே தமிழ்3 வானொலியினால் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.

மூன்று பெண் சாதனையாளர்களுக்கு “நோர்வே தமிழ்3 இன் தமிழர் மூவர்” விருது

நோர்வே தமிழ் 3 வானொலியினால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் “தமிழ்3 இன் தமிழர் மூவர்” விருதுகள் இம்முறை மூன்று பெண் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்த இலங்கையர்களை தாயகம் திரும்ப சிறிலங்கா அதிபர் அழைப்பு

போரின் போது, சிறிலங்காவில் இருந்து ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து சென்ற இலங்கையர்கள் அனைவரையும், மீண்டும் நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

வடக்கிலுள்ள மக்களுக்கு உதவுவதாக மைத்திரியிடம் ஜேர்மனி அதிபர் உறுதி

சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து, திருப்தி வெளியிட்டுள்ள ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கெல், வடக்கிலுள்ள மக்களின் நலன்களுக்காக ஜேர்மனி அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனி அதிபரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

மூன்று நாள் அதிகாரபூர்வ பயயணமாக ஜேர்மனி சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர், அந்த நாட்டின் அதிபர் ஏஞ்சலா மார்க்கலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.