மேலும்

ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இரண்டு தேர்தல்கள்

நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல்கள் 2020 ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என்று  சிறிலங்கா தேர்தல்கள் ஆணையக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

“2020 தேர்தல் ஆண்டாக இருக்கும். நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல்கள் இரண்டுமே  இந்த ஆண்டில்நடைபெறும்.

தேர்தல் நாளை முடிவு செய்வது சிறிலங்கா அதிபரின் பொறுப்பாகும்.

ஆனால் இரண்டு தேர்தல்களும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது.

இந்த தேர்தல்கள் அமைதியாக நடைபெறும் வாய்ப்புகள் உள்ளதாக நம்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *