சிறிலங்கா மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகள் சிலவற்றை நடைமுறைப்படுத்தத் தவறிய சிறிலங்காவுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரைத்துள்ளார்.