பொறுப்புக்கூறல் விவகாரம் – சிறிலங்காவுக்கு அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களமும் அழுத்தம்
சிறிலங்கா படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், நல்லிணக்கம் மற்றும் நம்பகமான இடைக்கால நீதிப் பொறிமுறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், சிறிலங்கா அரசாங்கத்திடம் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களமும் வலியுறுத்தியுள்ளது.