அட்மிரல் உலுகத்தென்னவுக்கு பிணை – சிஐடி பணிப்பாளருக்கு நீதிபதி கண்டனம்
சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதியும், கியூபாவுக்கான முன்னாள் தூதுவருமான அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்னவை பிணையில் விடுவித்துள்ள குருநாகல மேல்நீதிமன்றம், இந்த கைது விடயத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளது.