மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

கைவிடப்படுகிறது 20 ஆவது திருத்தச்சட்டம் – நொவம்பரில் 3 மாகாணசபைகளுக்கு தேர்தல்

சிறிலங்கா அரசாங்கத்தினால் அண்மையில வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு, கைவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் செயற்பாடுகள் தீவிரம்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேபாளத்தில் சுஸ்மா – வசந்த சேனநாயக்க சந்தித்துப் பேச்சு

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜூடன் சிறிலங்காவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க நேபாளத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

வடக்கின் நிலைமைகளை பார்வையிட வருகிறார் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர்

வடக்கின் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் இம்மாத இறுதியில் யாழ்ப்பாணத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் கரன்னகொட அடுத்த சில நாட்களில் கைது?

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட அடுத்த சில நாட்களுக்குள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படவுள்ளார் என்று ராவய வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

லொத்தர் சபைகளை பொறுப்பேற்க மாரப்பன மறுப்பு

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்க திலக் மாரப்பன இணங்கியுள்ளதாகவும், எனினும், அவர் தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பனவற்றைப் பொறுப்பேற்க மறுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு சிறிலங்காவுக்கு அமெரிக்கா முழு ஆதரவு

புதிய அரசியலமைப்பை வரையும் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் முழுமையான ஆதரவையும் வழங்கும் என்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் உறுதி அளித்துள்ளனர்.

யாழ். குடாநாட்டில் சிறிலங்கா கடற்படை கொமாண்டோக்கள் களமிறக்கம்

யாழ். குடாநாட்டில் கடலோரக் காவல்படைக்கு உதவியாக, சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படகுப் படையணி கொமாண்டோக்களும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குடாநாட்டில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் 87 பேர் கைது

யாழ். குடாநாட்டில் சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பு தேடுதல்களில் இதுவரை 87 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகினார்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவியில் இருந்து விலகுவதாக நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.