மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

மைத்திரியை சந்தித்தது உண்மை, மகிந்த தேசப்பிரியவும் இருந்தார் – மல்கம் ரஞ்சித் ஒப்புதல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அன்று இரவு, சிறிலங்கா அதிபர் செயலகத்துக்கு தான் சென்றதை ஒப்புக் கொண்டுள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், அங்கு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரியவும் இருந்தார் என்றும் கூறியுள்ளார்.

மாலைதீவில் சந்திரிகாவுக்கு முக்கியத்துவம் – மோடியையும் சந்திப்பு

மாலைதீவில் புதிய அதிபர் இப்ராகிம் சோலி தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்கும் நிகழ்வில்- சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

காமினி ஜெயவிக்ரம பெரேரா, விஜித ஹேரத் மீது மிளகாய்த் தூள் வீச்சு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடந்த குழப்பங்களின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் காமினி ஜெயவிக்ரம பெரேரா மீது மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த உறுப்பினர்கள், மிளகாய்த் தூளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இரண்டாவது நம்பிக்கையில்லா பிரேரணை – என்ன நடந்தது?

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று இரண்டாவது தடவையாக, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டது.பெரும் கூச்சல் குழப்பங்கள், மோதல்களுக்கு மத்தியில் நடந்தேறிய நாடாளுமன்ற அமர்வு பற்றிய நேரலைப் பதிவுகளின் தொகுப்பு.

போர்க்களமாகிய நாடாளுமன்றம் – இன்று நடந்தது என்ன?

இன்று முற்பகல் நடந்த குழப்பங்கள், மோதல்களை அடுத்து, முடிவுக்கு வந்த நாடாளுமன்ற அமர்வு நாளை பிற்பகல் 1.30 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகும் என்று சபாநாயகரின் செயலகம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தற்போது, செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

மகிந்த அரசு தோல்வி – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மகிந்த தரப்பு ஏற்க மறுத்து வரும் நிலையில், ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய கடிதம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் சுவாரசிய காட்சிகள்

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று சற்று நேரத்தில் கூடவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகம் பெரும் பரபரப்பான நிலையில் உள்ளது. இரண்டு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும், இன்று நேரகாலத்துடனேயே சபைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

குழப்பத்தின் உச்சியில் மகிந்த – மைத்திரி தரப்பு

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு மற்றும் நாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக அறிவித்துள்ள சபாநாயகரின் முடிவு என்பன, மகிந்த- மைத்திரி தரப்பினரை கடும் குழப்பத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது.

பாதுகாப்புச் சபையை அவசரமாக கூட்டினார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை அவசரமாக கூட்டியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.