மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

அனுமதியின்றி சீனக்குடாவில் இருந்து புறப்பட்ட ஜெட் – விசாரணை நடத்துமாறு கோரிக்கை

திருகோணமலை- சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து, நேற்றுமுன்தினம் சிங்கப்பூருக்கு தனியார் ஜெட் விமானம் ஒன்று உரிய அனுமதியின்றி புறப்பட்டுச் சென்றமை தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு சிவில் சமூக அமைப்புகள் கோரியுள்ளன.

வடக்கு மாகாண ஆளுனராக கலாநிதி சுரேன் ராகவன் நியமனம்

வடக்கு மாகாண ஆளுனராக கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் இவருக்கான நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வெள்ளம் – விசாரணைக்குழு முடக்கப்பட்டமை குறித்து சந்தேகங்கள்

கிளிநொச்சியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு மாகாண நீர்ப்பாசன அதிகாரிகள் காரணமாக இருந்தனரா என்பது குறித்து விசாரிக்க வடக்கு மாகாண ஆளுனரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டமை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

மைத்திரிக்கு நெருக்கடி – இன்று காலை உருவாகிறது சுதந்திரக் கட்சி மாற்று அணி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 20 அமைப்பாளர்கள்  தமது பதவியில் இருந்து விலகி, தனி குழுவொன்றை உருவாக்கவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா பறக்கிறது சிறிலங்கா அரசின் உயர்மட்டக் குழு

அரசியல் குழப்பங்களை அடுத்து இடைநிறுத்தப்பட்ட அமெரிக்காவின் நிதியுதவியை மீளப் பெறுவதற்காக, சிறிலங்கா அரசின் உயர்மட்டக் குழுவொன்று வொசிங்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்கிய டிஐஜி உடுகம்பொல மரணம்

வடக்கிலும் தெற்கிலும், ஏராளமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய, சிறிலங்காவின் முன்னாள் மூத்த பிரதி காவல்துறை அதிபர் பிறேமதாச உடுகம்பொல நேற்று மரணமானார்.

அமைச்சர்களின் சிறகை வெட்டும் மைத்திரி – ஐதேகவுக்கு எதிராக புதிய போர்

அமைச்சர்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களின் நியமனங்கள் தொடர்பாக பரிசீலிப்பதற்காக, தனது செயலர் உதய செனிவிரத்ன தலைமையிலான குழுவொன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

அனைத்து ஆளுனர்களையும் பதவி விலக உத்தரவு

அனைத்து மாகாணங்களினதும் ஆளுனர்களை உடனடியாக பதவியில் இருந்து விலகுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

உட்கட்சிப் பூசல் – சுதந்திரக் கட்சி தலைமையகத்தை மூட மைத்திரி உத்தரவு

வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தான் நாடு திரும்பும் வரை சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மாந்தையில் சீன குழுவினர் அகழ்வாய்வு

மன்னார் மற்றும் மாந்தை துறைமுகங்கள் ஊடாக சிறிலங்காவுடன் சீனர்கள் மேற்கொண்ட பண்டைய வணிகம் தொடர்பாக, சீன மற்றும் சிறிலங்கா தொல்பொருள் ஆய்வாளர்கள் கூட்டு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.