மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

ஐ.நாவின் தீவிரவாத எதிர்ப்பு பணியக அதிகாரிகள் சிறிலங்கா பிரதமருடன் ஆலோசனை

ஐ.நாவின் தீவிரவாத எதிர்ப்பு நிறைவேற்றுப் பணியகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், மின்சேல் கொனின்ஸ்  நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சுமார் 4 மணி நேரம் வரையே சிறிலங்காவில் தங்குவார் மோடி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சில மணித்தியாலங்களே இங்கு தங்கியிருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அதிபர் மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகளை சுமத்தும் பூஜித ஜயசுந்தர

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன் சாட்சியம் அளித்த – கட்டாய விடுமுறையில் உள்ள சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, சிறிலங்கா அதிபர் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளார்.

அமெரிக்க – சிறிலங்கா கடற்படைகளுக்கிடையில் கூடுதல் பயிற்சி வாய்ப்புகள் குறித்து பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், அரசியல், இராணுவ விவகாரங்களுக்கான உதவிச் செயலர் கிளார்க் கூப்பர், கிழக்கு கடற்படைத் தலைமையகத்துக்கும், கண்ணிவெடிகளை அகற்றும் பகுதிகளுக்கும் சென்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் நாடகமா? – அதிபருக்கு கடிதம் அனுப்பப்படவில்லை

அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த ஒன்பது முஸ்லிம் அமைச்சர்களினதும் பதவி விலகல் கடிதங்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்னமும் அனுப்பி வைக்கப்படவில்லை என்று, தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சர் பதவி ஐதேகவுக்கு- மைத்திரி இணக்கம்

சட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சர் பதவியை ஐதேகவைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அமைச்சர்கள் கூண்டோடு பதவி விலகல்

சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகித்து வந்த அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களும் பதவிகளை விட்டு விலகியுள்ளனர்.

ஜூன் 9 ஆம் நாள் சிறிலங்கா வருகிறார் இந்தியப் பிரதமர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 9ஆம் நாள்,சிறிலங்காவுக்கு குறுகிய  பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புதுடெல்லியில் இதனை உறுதிப்படுத்தினார்.

தேசிய புலனாய்வு பணியகத் தலைவர் போட்டுள்ள ‘குண்டு’

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே, தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடத்தப்படவில்லை என்று தேசிய புலனாய்வுப் பணியகத்தின் தலைவர் சிசிர மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

திருமலையில் இரண்டு அனல் மின் நிலையங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி

திருகோணமலை – சம்பூரிலும், புத்தளம்- நுரைச்சோலையிலும் மூன்று அனல் மின் நிலையங்களை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று முன்தினம் அனுமதி அளித்துள்ளது.