மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

உபாலி தென்னக்கோன் தாக்குதல் – கைரேகையால் மாட்டினார் இராணுவ அதிகாரி லலித் ராஜபக்ச

ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய  முக்கிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்படவுள்ளார் என, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி – நாளை மறுநாள் ஆரம்பம்

சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நாளை மறுநாள், ஆரம்பிக்கப்படவுள்ளன.

தூக்கிலிடும் உத்தரவும் இல்லை – தூக்கில் போடுபவரும் தெரிவாகவில்லை

மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு போதைப்பொருள் குற்றவாளிகளைத் தூக்கிலிடுவது தொடர்பான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு இன்னமும் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவிடம் உலங்குவானூர்திகளை கொள்வனவு செய்ய சிறிலங்கா விருப்பம்

ரஷ்ய தயாரிப்பு உலங்குவானூர்திகளை சிறிலங்கா கொள்வனவு செய்யும் சாத்தியங்கள் உள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை

போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரை தூக்கிடுவதற்கான ஆணையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதிய உடன்பாடு – சிறிலங்கா அதிபர் முட்டுக்கட்டை

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடனான உடன்பாடு, நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர், அதன் ஒவ்வொரு பிரிவும் கவனமாக ஆராயப்பட வேண்டும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் தொடருந்து மோதி 6 சிறிலங்கா படையினர் பலி

கிளிநொச்சியில் இன்று பிற்பகல்  சிறிலங்கா இராணுவ வாகனம் ஒன்றின் மீது, யாழ்தேவி தொடருந்து மோதியதில், 6 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இலங்கைத் தீவின் 90 வீதமான பவளப் பாறைகள் அழிந்து விட்டன

இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள 90 வீதமான பவளப் பாறைகள் இப்போது அழிந்து விட்டதாக, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளர் கலாநிதி ரேனி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

கைவிடப்பட்டது கல்முனை உண்ணாவிரதப் போராட்டம் – முஸ்லிம்களின் போராட்டமும் நிறைவு

கல்முனை வடக்கு தமிழ்  பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கடந்த திங்கட்கிழமை காலையில் இருந்து நடத்தப்பட்டு வந்த  உண்ணாவிரத போராட்டம்  இன்று முற்பகலுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

19 ஆவது திருத்தச்சட்டத்தை ஒழித்தால் தான் நாட்டுக்கு விமோசனம் – மைத்திரி

சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு, அரசியலமைப்பின் 18 ஆவது மற்றும் 19 ஆவது திருத்தச் சட்டங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.