மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

பிள்ளையானுடன் பேச ரணிலுக்கு தடை – கம்மன்பிலவுக்கு அனுமதி.

குற்றப் புலனாய்வுத்துறையின் தடுப்புக்காவலில் உள்ள, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுடன் ( சிவநேசதுரை சந்திரகாந்தன்) பேசுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத் தலமாகும் இனப்படுகொலை நினைவுச்சின்னங்கள்

சிறிலங்காவின் போர் மற்றும் இனப்படுகொலை நினைவுச் சின்னங்கள்,  பூகோள இருண்ட சுற்றுலா (Dark Tourism) சந்தையின் வளர்ச்சி மற்றும் வருமான அதிகரிப்புக்கான காரணிகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்துக்களை நீக்குமாறு மோடியிடம் வலியுறுத்திய மகாநாயக்கர்கள்

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் உள்ள  பௌத்த புனிதத்தலமான புத்தகயாவின் முகாமைத்துவப் பொறுப்பில் இருந்து இந்துக்கள் நீக்கப்பட வேண்டும் என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்காவின் பௌத்த பீடங்கள் வலியுறுத்தியுள்ளன.

டியாகோ கார்சியாவில் இலங்கையர்கள் தடுப்பில் இல்லை

டியாகோ கார்சியாவில் இருந்து,  அறுபதுக்கும் மேற்பட்ட இலங்கையர்களை விமானம் மூலம் கொழும்பு திரும்புவதற்கு பிரித்தானிய அரசாங்கம் இதுவரை உதவியுள்ளது என  வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம்  இராஜாங்க அமைச்சர் ஜெஸ்ஸி நோர்மன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் மிர் கொடுப்பனவு முறையை சிறிலங்கா மத்திய வங்கி நிராகரிப்பு

ரஷ்யாவுடன் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு, ரஷ்யாவின், மிர் கொடுப்பனவு முறையைப் பயன்படுத்துவதற்கு, சிறிலங்கா மத்திய வங்கி மறுப்புத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐ.நா பொதுச் சபையில் பதுங்கிக் கொண்டது சிறிலங்கா

உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை,  தன்னுடன் இணைத்துக் கொண்ட ரஷ்யாவைக் கண்டிக்கும் வகையில், ஐ.நா பொதுச் சபையில், கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் சிறிலங்கா வாக்களிக்காமல் பதுங்கிக் கொண்டுள்ளது.

கொழும்பில் தேவாலயங்களுக்கு சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு

கல்கிசை தொடக்கம் நீர்கொழும்பு வரையான கரையோரப் பிரதேசங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயப் பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு திட்டம் ஒன்றை சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை நடைமுறைப்படுத்தவுள்ளது.

பிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ  அதிகாரிகள்?

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட சிறிலங்கா அதிகாரிகள் மீது பிரித்தானியாவின்  புதிய அரசாங்கம் தடைகளை விதிக்கக் கூடிய ஆபத்து உள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவை நோக்கி வரிசை கட்டும் ரஷ்ய போர்க்கப்பல்கள்

ஒரே வாரத்தில் ரஷ்ய கடற்படையின் மூன்றாவது போர்க்கப்பல், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

சீனாவிடம் 2 பில்லியன் டொலர் கடன் கேட்கும் சிறிலங்கா

சீனாவிடம் இருந்து சுமார் 2 பில்லியன் டொலர் வரை கடனைப் பெற்றுக் கொள்வது குறித்து சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தி வருவதாக, சிறிலங்கா மத்திய வங்கியின் மூத்த பிரதி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.