மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

ஆய்வுக்கப்பல்கள் மீதான தடை- சீனத் தூதுவர் கவலைப்படாதது ஏன்?

2023 ஒக்டோபரில் சிறிலங்காவுக்கு வந்த சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6, அண்மையில் சிறிலங்காவின் தனித்துவமான பொருளாதார கடல் எல்லைக்குள் இருந்து, தனது குழு உறுப்பினர் ஒருவருக்கு மருத்துவ உதவி கோரி, சிறிலங்கா கடற்படைக்கு ஆபத்து சமிக்ஞையை அனுப்பியது.

பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டத்தில் காணிகள் விடுவிப்பு குறித்து தீர்மானம் இல்லை

வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகள் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆராயப்பட்டுள்ள போதும், அவற்றை விடுவிப்பது குறித்த தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.

தேசிய அபிவிருத்தி வங்கி- 13.2 பில்லியன் ரூபா மோசடியில் என்ன நடந்தது?

சிறிலங்காவின் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட கடன் வழங்கும் நிறுவனமான தேசிய அபிவிருத்தி வங்கியில் 2026 ஏப்ரல் மாத தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளிப்பட்ட உள் மோசடியானது, சிறிலங்கா வர்த்தக வங்கி வரலாற்றில் மிகப்பெரிய செயற்பாட்டு ஆபத்து தோல்விகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

கைது, தடுப்புக்காவலுக்கு எதிராக சுரேஷ் சாலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான  தனது கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிராக, அவசர தலையீட்டைக் கோரி, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மேன்முறையீட்டு நீதிமன்றத்தை  நாடியுள்ளார்.

ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் மீண்டும் சிறிலங்கா இராணுவம்

சுமார் பத்தாண்டு இடைவெளிக்குப் பின்னர்  ஹெய்டியில் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக சிறிலங்கா படைகள் அனுப்பப்படவுள்ளதாக  மூத்த அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அடுத்த மாதம் ரஷ்யா பயணம்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்  விஜித ஹேரத் அடுத்த மாதம் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ரஷ்யா மீதான தடைக்கு விலக்கு கோரிய சிறிலங்கா – இன்னமும் பதிலளிக்காத அமெரிக்கா

ரஷ்யாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு விலக்குப் பெறுவதற்காக சிறிலங்கா விடுத்த கோரிக்கைக்கு, அமெரிக்கா இன்னமும் பதிலளிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார வீழ்ச்சியைத் தவிர்க்க போராடுகிறது சிறிலங்கா

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டதைப் போன்ற ஒரு பெரும் பொருளாதார வீழ்ச்சி மீண்டும் நிகழாமல் தடுக்க, சிறிலங்கா போராடி வருகிறது. நவம்பரில் ஏற்பட்ட ஒரு கொடிய புயலின் பாதிப்புகளுடன், நீடித்த மத்திய கிழக்கு போரும் சேர்ந்து நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

சிறிலங்காவுடன் நீண்டகால எரிசக்தி உடன்பாட்டை எதிர்பார்க்கும் ரஷ்யா

சிறிலங்காவும் ரஷ்யாவும் நீண்டகால எரிசக்தி விநியோகம் தொடர்பான ஒரு உடன்பாட்டிற்கு  வர முடியும் என ரஷ்யாவின் பிரதி வெளியுறவு அமைச்சர் அன்ட்ரே ருடென்கோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.