மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

சிறிலங்கா அமைச்சரின் நிகழ்வைப் புறக்கணித்து ஊடகவியலாளர்கள் போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், தாக்கப்பட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகளை முன்னெடுக்க  வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில்  இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணிப் புதைகுழி தொடர்பாக 7 கோரிக்கைகளை வலியுறுத்தி ஐ.நாவுக்கு கடிதம்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக ஏழு கோரிக்கைகளை வலியுறுத்தி, யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க நீதி சமாதான ஆணைக்குழு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்குக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி கத்தோலிக்க குருமார் பேரணி

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தியில் புதைக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி, யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினரால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மண்டையோடு இல்லாத எலும்புக்கூடுகளும் செம்மணிப் புதைகுழியில் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியில், இருந்து நேற்று  மண்டையோடு இல்லாத எலும்புக்கூடுகள் உள்ளிட்ட 13 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

செம்மணிப் புதைகுழியில் தோண்டத் தோண்ட வெளிவரும் எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 37ஆவது நாளான நேற்று 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 437 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி, மனிதப் புதைகுழியில்  நேற்று மூன்றாம் கட்டத்தின் 36வது நாள்  அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது,  ஆறு எலும்புக் கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணியில் நேற்று ஒரே நாளில் 11 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி, மனித புதைகுழியில் இருந்து நேற்று 11 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணிப் புதைகுழியில் நேற்றும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம் -செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட 34வது நாள் அகழ்வுப் பணியின் போது, ஆறு மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

காணிகளை விடுவிக்கக் கோரி வலி.வடக்கு மக்கள் போராட்டம்

சிறிலங்கா படையினரால் உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள வலி.வடக்கு பகுதியில் உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, பலாலி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று மட்டும் 19 எலும்புக்கூடுகள் செம்மணியில் மீட்பு – அகழ்வுப் பணி இடைநிறுத்தம்.

யாழ்ப்பாணம்- செம்மணி , சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில்  நேற்று மட்டும், 19 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில், அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.