மேலும்

செய்தியாளர்: ஐரோப்பியச் செய்தியாளர்

ஜெனிவாவில் மௌனம் காத்தது இந்தியா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று நடந்த சிறிலங்கா தொடர்பான விவாதத்தில், இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்தது.

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு ஏமாற்றம் – பிரதி வெளிவிவகார அமைச்சரின் உரை இடைநிறுத்தம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று நடந்த சிறிலங்கா தொடர்பான விவாதத்தில், சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தனது உரையை இடையில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

வெளிநாட்டு நீதிபதிகளை வலியுறுத்தினார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் – தொடங்கியது விவாதம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சமர்ப்பித்த அறிக்கை மீது தற்போது விவாதம் இடம்பெற்று வருகிறது. சிறிலங்கா நேரப்படி இரவு 7.40 மணியளவில் இந்த விவாதம் ஆரம்பித்தது.

ஜெனிவாவில் இன்று சிறிலங்கா குறித்த விவாதம்

ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் இன்று சிறிலங்கா குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது.

புலிகளுக்கான நிதி சேகரிப்பு தீவிரவாத செயற்பாடே – ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்

விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்த நால்வர், தமது நடவடிக்கையை தீவிரவாதச் செயற்பாடு என்று வகைப்படுத்தக் கூடாது என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.

தீர்மான வரைவு ஐ.நா பேரவையில் சமர்ப்பிப்பு – கண்காணிப்பு பணியகம் பற்றி ஏதுமில்லை

சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவு இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் தொடர்ச்சியாக இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இடம்பெற்ற ‘மாவீரர் நாள்’

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் மாவீரர் நாள் நினைவு கூரல் தொடர்பாகவும், குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் காத்திரமான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையைக் கவனத்தில் எடுத்து, சிறிலங்கா தொடர்பாக இன்னும் உறுதியானதும், காத்திரமானதுமான தீர்மானத்தை உறுப்பு நாடுகள் பேரவையின் இந்த அமர்வில் முன்வைக்க வேண்டும் என்று அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறிலங்காவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்- ஐ.நா, உறுப்பு நாடுகளுக்கு ஆணையாளர் பரிந்துரை

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை செயற்படுத்துவதற்கான உதவிகளை வழங்க வேண்டும் என்றும், ஐ.நாவுக்கும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வெளியானது ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை – சிறிலங்காவுக்கான பரிந்துரைகள்

சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஜெனிவாவில்  சற்று முன்னர் வெளியாகியுள்ளது.  2015ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி விளக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.