சுவிசில் தமிழர் உள்ளிட்ட வெளிநாட்டவரை நோக்கி வரும் பேராபத்து
குற்றம்புரியும் வெளிநாட்டவர்களை நாடுகடத்த வேண்டுமா? இல்லையா? என்று எதிர்வரும் 28.02.2016 அன்று சுவிஸ் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.
குற்றம்புரியும் வெளிநாட்டவர்களை நாடுகடத்த வேண்டுமா? இல்லையா? என்று எதிர்வரும் 28.02.2016 அன்று சுவிஸ் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.
சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு விடயத்தில், சமரசம் செய்து கொள்ளும் எந்த முடிவையும் எந்தச் சூழ்நிலையிலும் எடுக்கமாட்டேன் என்று உறுதியளித்திருக்கிறார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ள பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனர்வாழ்வுப் பணிகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 6.6 மில்லியன் பவுண்டுகளை (சுமார் 1450 மில்லியன் ரூபா) வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
சிறிலங்காவைப் புறக்கணித்த பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத், நாளை கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்க, மோல்டாவுக்குச் செல்லவுள்ளார்.
பிரான்சின் பாரிஸ் நகரில் நேற்றிரவு இடம்பெற்ற தாக்குதல்களில் 140இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அதேவேளை, பாரிசின் Bataclan arts centre கலையரங்கில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 100இற்கும் அதிகமானோரை அதிரடித் தாக்குதல் மூலம் பிரெஞ்சுக் காவல்துறை இன்று அதிகாலை மீட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் இன்றிரவு இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் குறைந்தது 60 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
“நஞ்சுண்டகாடு” குணா கவியழகனின் இரண்டாவது நாவலான ‘விடமேறிய கனவு’ அறிமுக அரங்கு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது.
சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ணில் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில், இந்த ஆண்டின் சிறந்த மாணவராக, ஈழத்தமிழ் மாணவனான அருளானந்தம் மரிய அனோஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்த நோர்வே மேற்கொண்ட முயற்சிகளை விபரிக்கும், ‘ஒரு உள்நாட்டுப் போரின் முடிவுக்கு – சிறிலங்காவுடனான நோர்வேயின் அமைதி ஈடுபாடு’ (To End a Civil War : Norway’s Peace Engagement with Sri Lanka) என்ற நூல், நேற்று முன்தினம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது.
சிறிலங்கா அரசுக்குள், தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமையை வழங்க சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தயாராக இருந்தார் என்று சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.