மேலும்

செய்தியாளர்: ஐரோப்பியச் செய்தியாளர்

பாரிசில் தொடர் தாக்குதல்கள் – 60 பேருக்கு மேல் பலி, 100 பேர் பணயக்கைதிகளாக பிடிப்பு

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் இன்றிரவு இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் குறைந்தது 60 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

நோர்வேயில் குணா. கவியழகனின் ‘விடமேறிய கனவு’ அறிமுக அரங்கு

“நஞ்சுண்டகாடு” குணா கவியழகனின் இரண்டாவது நாவலான ‘விடமேறிய கனவு’ அறிமுக அரங்கு நோர்வே தலைநகர்  ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது.

பேர்ண் மாநகரில் சிறந்த மாணவராக ஈழத்தமிழ் மாணவன் தெரிவு

சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ணில் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில், இந்த ஆண்டின் சிறந்த மாணவராக, ஈழத்தமிழ் மாணவனான அருளானந்தம் மரிய அனோஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்காவில் நோர்வேயின் அமைதி முயற்சிகள் குறித்த நூல் ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது

சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்த நோர்வே மேற்கொண்ட முயற்சிகளை விபரிக்கும், ‘ஒரு உள்நாட்டுப் போரின் முடிவுக்கு – சிறிலங்காவுடனான நோர்வேயின் அமைதி ஈடுபாடு’ (To End a Civil War : Norway’s Peace Engagement with Sri Lanka) என்ற நூல், நேற்று முன்தினம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது.

எத்தகைய அழுக்கு பேரங்களுக்கும் தயாராக இருந்தார் மகிந்த – எரிக் சொல்ஹெய்ம்

சிறிலங்கா அரசுக்குள், தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமையை வழங்க சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தயாராக இருந்தார் என்று சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

ஒஸ்லோவின் பிரதி நகர முதல்வராகிறார் ஈழத் தமிழ்ப்பெண்

நோர்வேயின் ஒஸ்லோ நகரின் பிரதி நகரமுதல்வராக ஈழத் தமிழ்ப் பெண்ணான ஹம்சாயினி குணரத்தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கம்சி என்று அழைக்கப்படும் இவர், இன்று நடக்கவுள்ள கூட்டத்தில் முறைப்படி, பிரதி நகரமுதல்வராகத் தெரிவு செய்யப்படுவார்.

சிறிலங்காவுக்கு இது வரலாற்றுச் சந்தர்ப்பம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம்

போரின் போதும், போருக்குப் பின்னரும், மோசமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதிலளிப்பதற்கு, சிறிலங்காவுக்கு ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ரவினா சம்தாசனி தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் திருத்தங்களின்றி- வாக்கெடுப்பின்றி நிறைவேறியது தீர்மானம்

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்ட தீர்மானம், சற்று முன்னர் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஜெனிவாவில் தொடங்கியது சிறிலங்கா குறித்த தீர்மான வரைவு மீதான விவாதம் – நேரலைப் பதிவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு மீதான விவாதம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

அனைத்துலக நீதிபதியை கொழும்புக்கு அனுப்புகிறது ஜப்பான்

சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகள் குறித்து கவனிக்க, அனைத்துலக நீதிபதி ஒருவரை ஜப்பான் இந்தமாதம் கொழும்புக்கு அனுப்பவுள்ளது.