மேலும்

‘பொருளாதார வளர்ச்சிக்கு நல்லிணக்கம் முக்கியம்’ – பிரான்ஸ் இராஜதந்திரி

தண்டனையில் இருந்து தப்பிக் கொள்வதை, முடிவுக்குக் கொண்டு வந்து இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் பிரான்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சின் ஆசிய மற்றும் ஓசியானியா பிராந்தியத்துக்கான பணிப்பாளரான Thierry Mathou ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.

“ஜெனிவா தீர்மானத்தின் இணை அனுசரணையில் இருந்து விலகும் சிறிலங்காவின் முடிவினால், அந்த தீர்மானம் இறந்து விடாது.

அது இன்னும் அட்டவணையில் உள்ளது. இது சட்டபூர்வமாக பிணைக்கப்பட்டுள்ளது. அதன் நோக்கம் இன்னும் உள்ளது.

நல்லிணக்கம்  ஒரு முக்கியமான முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி, சிறிலங்காவில் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் என்று கூறப்படுவதாக நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால், பொருளாதார வளர்ச்சியை அடைவதற்காக, நீங்கள் நல்லிணக்கத்தைப் பெற வேண்டும்.

தண்டனையில் இருந்து தப்பித்தலுக்கு எதிரான போராட்டம்,  வெளிப்படையாக ஒரு முக்கியமான இலக்காக இருக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *