டெனீஸ்வரன் விவகாரத்தினால் வடக்கு அரசியலில் குழப்பநிலை
வடக்கு மாகாண அமைச்சர் பதவியில் டெனீஸ்வரன் தொடர்ந்து நீடிக்கிறார் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து, வடக்கு மாகாண அரசியலில் குழப்பமான நிலை நீடித்து வருகிறது.
வடக்கு மாகாண அமைச்சர் பதவியில் டெனீஸ்வரன் தொடர்ந்து நீடிக்கிறார் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து, வடக்கு மாகாண அரசியலில் குழப்பமான நிலை நீடித்து வருகிறது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆளுனரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் மீளப் பெற்றுள்ளனர்.
வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராகவும், ஆதரவாகவும், ஆளும்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் பிளவுபட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் எந்த முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என்று தெரிய வருகிறது.