கிரித்தல இராணுவ புலனாய்வு முகாமுக்குள் தேடுதல் நடத்த நீதிமன்றம் அனுமதி
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்திச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த, கிரித்தல இராணுவப் புலனாய்வு முகாமில் ஆய்வுகளை மேற்கொண்டு ஒளிப்படம் எடுக்கவும், அங்குள்ள இராணுவ ஆவணங்களைப் பரிசீலிக்கவும், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.