மேலும்

செய்தியாளர்: கனடாச் செய்தியாளர்

வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுப்போம்- கனேடியப் பிரதமர்

உண்மையான அமைதியைக் கொண்டுவர, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கத்துக்கு கனடா தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுக்கும் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.

ஒன்ராரியோ லிபரல் கட்சி வேட்பாளராக இடைத்தேர்தலில் களமிறங்குகிறார் ராதிகா

இலங்கையில் பிறந்த முன்னாள் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான, ராதிகா சிற்சபைஈசன், ஸ்காபரோ-ரூஜ் ரிவர் தொகுதிக்கான இடைத்தேர்தலில், ஒன்ராரியோ லிபரல் கட்சியின் வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.

நவிபிள்ளையை எச்சரித்து விட்டு போரைத் தீவிரப்படுத்திய மகிந்த – கனடாவில் வெளிவந்த உண்மை

தமது நாட்டில் தீவிரவாதத்துக்கு முடிவுகட்டும் பாரிய நடவடிக்கையை தாம் முன்னெடுப்பதாகவும், அதற்காகத் தன்னை நான் விமர்சனம் செய்யக் கூடாது என்றும், சிறிலங்கா அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச தன்னிடம் தெரிவித்ததாக தகவல் வெளியிட்டுள்ளார் முன்னாள், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை.

விடுதலைப் புலிகளை தடைசெய்ய கதிர்காமர் எடுத்த நடவடிக்கை தவறானது – எரிக் சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளை அனைத்துலக அளவில் தடைசெய்வதற்கு சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் மேற்கொண்ட நடவடிக்கை தவறானது என்று சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரும், அந்த நாட்டின் முன்னாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

கனடா நாடாளுமன்றத் தேர்தல் – ஹரி ஆனந்தசங்கரி வெற்றி, ராதிகா தோல்வி

கனேடிய நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில் லிபரல் கட்சி முன்னணியில் இருக்கும் நிலையில் அந்தக் கட்சியின் சார்பில் ஸ்காபரோ ரூஜ் பார்க்  தொகுதியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 4294 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஜெனிவா தீர்மானம் கலப்பு விசாரணையா- உள்ளக விசாரணையா? – சுமந்திரன் உரை- பாகம் 2

கனடாவின் ரொறன்ரோ நகரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ‘‘கலப்பு குற்றவியல் விசாரணை கோரி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்மொழிந்துள்ள தீர்மானமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் நிறைவுப் பகுதி.

நடக்கப் போவது கலப்பு விசாரணையா- உள்ளக விசாரணையா? – சுமந்திரன் உரை – பாகம் 1

கனடாவின் ரொறன்ரோ நகரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ‘‘கலப்பு குற்றவியல் விசாரணை கோரி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்மொழிந்துள்ள தீர்மானமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரை.

முன்னாள் புலி உறுப்பினரை நாடு கடத்த கனேடிய உயர்நீதிமன்றம் தடை

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வரிவசூலிப்பாளராக பணியாற்றியவரை கனடாவில் இருந்து நாடு கடத்துவதற்கு, கனேடிய சமஷ்டி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

புலம்பெயர் தமிழ் அமைப்பைச் சந்திக்கிறார் அமெரிக்க உதவி இராஜாங்கச்செயலர் நிஷா பிஸ்வால்

அமெரிக்காவின், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இன்று அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

கனேடிய இராணுவ, காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளை அச்சுறுத்திய இலங்கைத் தமிழர் கைது

கனடாவின் அரசாங்க, இராணுவ, காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்ச்சியான கொலை அச்சுறுத்தல்களை விடுத்து வந்த ரொரன்ரோவைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் ஒருவரை கனேடிய காவல்துறை கைது செய்துள்ளது.