மேலும்

செய்தியாளர்: கனடாச் செய்தியாளர்

மார்க்கம் தோன்ஹில் இடைத்தேர்தலில் இரண்டாமிடத்தில் ராகவன் – லிபரல் கட்சி வேட்பாளர் வெற்றி

கனடாவில் மார்க்கம் தோன்ஹில் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் மேரி 2355 இற்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் ராகவன் பரஞ்சோதி  இரண்டாமிடத்தைப் பிடித்தார்.

ஸ்காபரோ- ரூஜ் ரிவர் மாநகரசபைத் தேர்தலில் ஈழத்தமிழரான நீதன் சன் வெற்றி

கனடாவின் ஸ்காபரோ- ரூஜ் ரிவர் மாநகரசபையின் 42 ஆவது வட்டாரத்துக்கான உறுப்பினரைத் தெரிவு செய்வதற்காக நேற்று நடந்த இடைத்தேர்தலில், ஈழத்தமிழரான நீதன் சன் வெற்றி பெற்றுள்ளார்.

ஒன்ராறியோ பிரதமரைச் சந்தித்தார் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்

கனடாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று, ஒன்ராரியோ பிரதமர் கத்லீன் வைன் அம்மையாரைச் சந்தித்து இருதரப்பு பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சித்திரவதை செய்யப்பட்ட கனடியத் தமிழருக்கு இழப்பீடு – சிறிலங்காவுக்கு ஐ.நா குழு உத்தரவு

கனடாவில் இருந்து சிறிலங்காவுக்கு சென்ற போது, கைது செய்து தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட தமிழருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு உத்தரவிட்டுள்ளது.

புலிகளுக்கு ஏவுகணைகளை வாங்க முயன்ற மூவருக்கான சிறைத்தண்டனை குறைப்பு

விடுதலைப் புலிகளுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில், 25 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று ஈழத் தமிழர்களின் தண்டனைக் காலத்தை புரூக்லின் நீதிமன்றம் குறைத்துள்ளது.

கனடா இடைத்தேர்தலில் ஒரே தொகுதியில் மோதிய இரு தமிழ் வேட்பாளர்களும் தோல்வி

கனடாவில் ஒன்டாரியோ மாகாண சட்டமன்றத்தின், ஸ்காபரோ ரூஜ் ரிவர் தொகுதிக்கு நேற்று நடந்த இடைத்தேர்தலில், இரண்டு ஈழத் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினர்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுப்போம்- கனேடியப் பிரதமர்

உண்மையான அமைதியைக் கொண்டுவர, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கத்துக்கு கனடா தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுக்கும் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.

ஒன்ராரியோ லிபரல் கட்சி வேட்பாளராக இடைத்தேர்தலில் களமிறங்குகிறார் ராதிகா

இலங்கையில் பிறந்த முன்னாள் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான, ராதிகா சிற்சபைஈசன், ஸ்காபரோ-ரூஜ் ரிவர் தொகுதிக்கான இடைத்தேர்தலில், ஒன்ராரியோ லிபரல் கட்சியின் வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.

நவிபிள்ளையை எச்சரித்து விட்டு போரைத் தீவிரப்படுத்திய மகிந்த – கனடாவில் வெளிவந்த உண்மை

தமது நாட்டில் தீவிரவாதத்துக்கு முடிவுகட்டும் பாரிய நடவடிக்கையை தாம் முன்னெடுப்பதாகவும், அதற்காகத் தன்னை நான் விமர்சனம் செய்யக் கூடாது என்றும், சிறிலங்கா அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச தன்னிடம் தெரிவித்ததாக தகவல் வெளியிட்டுள்ளார் முன்னாள், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை.

விடுதலைப் புலிகளை தடைசெய்ய கதிர்காமர் எடுத்த நடவடிக்கை தவறானது – எரிக் சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளை அனைத்துலக அளவில் தடைசெய்வதற்கு சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் மேற்கொண்ட நடவடிக்கை தவறானது என்று சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரும், அந்த நாட்டின் முன்னாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.