சிறிலங்காவுக்கான நிதி குறைப்பு – அமெரிக்க செனெட் குழு எதிர்ப்பு
சிறிலங்காவுக்கான உதவிகளை 92 வீதத்தினால் குறைக்கும் திட்டத்துக்கு அமெரிக்காவின் செனெட் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவுக்கான உதவிகளை 92 வீதத்தினால் குறைக்கும் திட்டத்துக்கு அமெரிக்காவின் செனெட் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவில் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புகளும் கற்பனைக்கு எட்டாத போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி அவர்களின் கண்களில் தென்படவேயில்லை என்றும் தெரிவித்துள்ளார் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான கிறிஸ் ஸ்மித்.
பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் உலக அமைதிக்கு சிறிலங்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு முக்கியமானது என்று, சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் பிரதிநிதிக் குழு தெரிவித்துள்ளது.
2018 நிதி ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதற்கு அமெரிக்க காங்கிரஸ் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பில் ஜோன்சன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும், கண்காணிப்பதற்கும், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்சன் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மான வரைவில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் பரிந்துரைத்துள்ளபடி, போர்க்குற்றங்கள், மீறல்கள் குறித்து விசாரிக்க கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும் விடயம் உள்ளடக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.