மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

வரவேற்கிறார் பிரித்தானிய அமைச்சர் – அவுஸ்ரேலியாவும் ஆதரவு

சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதை பிரித்தானியாவும் அவுஸ்ரேலியாவும் வரவேற்றுள்ளன.

சிஐஏ, எம்16 புலனாய்வு அமைப்புகளுடன் போரிட்டோம் – உதய கம்மன்பில

சிறிலங்கா அரசியல் நெருக்கடியில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ) மற்றும் பிரித்தானியாவின் எம்-16 புலனாய்வு அமைப்புகளின் தலையீடுகள் இருந்ததாக, மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.

வேண்டா வெறுப்பாக ரணிலை பிரதமராக நியமித்த சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணிலை நியமித்தது ஏன்? – சிறிலங்கா அதிபர் விளக்கம்

நாடாளுமன்ற மரபுகள் மற்றும் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்தே, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விளக்கமளித்துள்ளார்.

ஐதேகவின் கதவைத் தட்டும் அங்கஜன் உள்ளிட்ட 21 சுதந்திரக் கட்சி எம்.பிக்கள்

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் வெளியிட்டுள்ளனர் என்றும், இதுதொடர்பாக உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதவியை இழக்கிறார் சம்பந்தன்? – எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த

அரசியல் சதியின் மூலம், பெற்றுக்கொண்ட சிறிலங்காவின் பிரதமர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதில் தோல்வி கண்ட, மகிந்த ராஜபக்சவின் கவனம் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி மீது திரும்பியுள்ளது. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சி என்ற தகைமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆரவாரமின்றி இன்று காலை பிரதமராக பதவியேற்கிறார் ரணில்

சிறிலங்கா பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் 10.30 மணிக்குப் பதவியேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிபர் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதிக்கம் செலுத்துவதை தடுப்பதற்காக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரு வீட்டில் ஒரு மணி நேரம் ரணிலுடன் மனம் விட்டுப்பேசினார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இரவு நீண்ட சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஞாயிறன்று பிரதமராக பதவியேற்கிறார் ரணில்

சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நாளை மறுநாள்- ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பதவியேற்பார் என்று ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.