மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

புதிய பிரதமராக சமல் அல்லது நிமல் – சிறிலங்கா அதிபர் ஆலோசனை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த,  சமல் ராஜபக்ச அல்லது நிமல் சிறிபால டி சில்வாவை, கூடிய விரைவில் பிரதமராக நியமிப்பது குறித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன,  ஆலோசித்து வருவதாக, அதிபர் செயலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மைத்திரிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை? – ஐதேகவின் அடுத்த நகர்வு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றிரவு நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்ததை அடுத்து, அவருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையைக் கொண்டு வரும் முனைப்புகளை ஐக்கிய தேசிய முன்னணி தீவிரப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

மகிந்தவுக்கு காத்திருக்கும் அடுத்த அடி – உச்சநீதிமன்றில் உடனடி விசாரணை சாத்தியமில்லை

மகிந்த ராஜபக்ச பிரதமராகவும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாகவும் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை – உச்சநீதிமன்றத்தை நாடி இடைநிறுத்தும் மகிந்த தரப்பின் முயற்சிக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபரின் குழப்பம் – முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று மாலையில் இரு வெவ்வேறு சந்திப்புகளிலும், குழப்பமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

அரசியல் நெருக்கடிக்கு 24 மணி நேரத்துக்குள் தீர்வு – சிறிலங்கா அதிபர்

மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் செயற்பட இடைக்கால தடைவிதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, அடுத்த 24 மணி நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை தாம் எடுக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று மாலை சிறிலங்கா அரசியலில் திடீர் திருப்பங்கள் நிகழும் வாய்ப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன  இன்று நாளை நடத்தவுள்ள இரண்டு முக்கிய சந்திப்புகளை தொடர்ந்து,   திடீர் அரசியல் மாற்றங்கள் நிகழக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஐதேமுவை வெட்டிவிட்டு பசில் குழுவுடன் இரவிரவாக மைத்திரி ஆலோசனை

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக, நேற்றிரவு ஐக்கிய தேசிய முன்னணியுடன் நடத்தவிருந்த கூட்டத்தை திடீரென கடைசி நேரத்தில் ரத்துச் செய்த, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுணதீவு காவல்துறையினர் கொலை – முன்னாள் போராளி சரண்

மட்டக்களப்பு- வவுணதீவு சோதனைச் சாவடியில், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த, சிறிலங்கா காவல்துறையினர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா காவல்துறையினரால் தேடப்பட்ட ஒருவர், நேற்று கிளிநொச்சி காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

கூட்டமைப்பு, ஐதேகவுக்கு ஒதுக்கிய நேரத்தில் மகிந்தவுடன் இருந்த சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும், ஐக்கிய தேசிய முன்னணியுடன் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னரே சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.

புதிய பிரதமரை நியமிக்குமாறு பிரேரணை கொண்டு வரக் கோரினார் மைத்திரி

புதிய பிரதமரை நியமிக்குமாறு எதிர்வரும் 05ஆம் நாள் நாடாளுமன்றத்தில் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றினால், புதிய பிரதமரை நியமிக்கத் தயார் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.