மேலும்

செய்தியாளர்: ஐரோப்பியச் செய்தியாளர்

நோர்வேயின் முதன்மை 10 வெளிநாட்டவர்களில் ஒருவராக ஈழத்தமிழ்ப் பெண் தெரிவு

நோர்வேயின் 10 முதன்மை வெளிநாட்டவர்களில் (Top 10) ஒருவராக ஈழத்தமிழ் பெண்ணான மகா சிற்றம்பலம் தெரிவாகியுள்ளார். 48 வயதான இவர் 1987ஆம் ஆண்டு, தனது 20வது வயதில் ஈழத்திலிருந்து நோர்வேக்குப் புலம்பெயர்ந்தவர்.

பிரித்தானியா: மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் டேவிட் கமரொன் – 4 இலங்கையர்களில் ஒருவரே வெற்றி

பிரித்தானியாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் டேவிட் கமரொன் தலைமையிலான கொன்சர்வேட்டிவ் கட்சி அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி, வெற்றி பெற்றுள்ளது.

பிரித்தானிய தேர்தல் – உமா குமரன் தோல்வி, ரணில் வெற்றி, யோகலிங்கம் படுதோல்வி

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான உமா குமரன்,  ஹரோ ஈஸ்ட் தொகுதியில்  கொன்சர்வேட்டிவ்  வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி முன்னிலை

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில், முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இதுவரை வெளியான முடிவுகளில் தொழிற்கட்சி முன்னிலையில் உள்ளது.

சிறிலங்காவில் நோர்வேயின் சமாதான முயற்சிகளை விபரிக்கும் நூல் செப்ரெம்பரில் வெளியாகிறது

சிறிலங்காவில் நோர்வேயின் சமாதான முயற்சிகளை விபரிக்கும் நூல் ஒன்று வரும் செப்ரெம்பர் மாதம் வெளிவரவிருப்பதாகத் தகவல் வெளியிட்டுள்ளார் சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்.

பிரித்தானியாவில் இன்று தேர்தல் – உமா குமரனுக்கு அதிக வெற்றி வாய்ப்பு?

பிரித்தானியாவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், லண்டனில் உள்ள ஹரோ ஈஸ்ட் தொகுதியில் போட்டியிடும், ஈழத்தமிழ் வேட்பாளரான உமா குமரன் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.

நாளை பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தல் – ஈழத்தமிழர்களின் ஆதிக்கம் வெளிப்படுத்தப்படுமா?

பிரித்தானியாவில் நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் உள்ளிட்ட நான்கு இலங்கை வம்சாவளியினரும் போட்டியிடுவதால், பரபரப்பு அதிகமாகியுள்ளது.

புலம்பெயர் தமிழ்க்கல்வி சரியான திசையில் பயணிக்கிறதா? – நோர்வேயில் நடந்த ஆய்வரங்கு

புலம்பெயர் சூழலில் தமிழ்க் கல்வி தொடர்பாக தமிழ்3 வானொலியின் ஏற்பாட்டில் கடந்த மே 1ம் நாள் வெள்ளிக்கிழமை, ஒஸ்லோவின் Linderud பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற ஆய்வரங்கில் பயனுள்ள, காத்திரமான பல விடயங்கள் பேசப்பட்டுள்ளன.

புலிகளுக்கு நிதி சேகரித்த 5 ஈழத்தமிழர்களுக்கு ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை

விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐந்து ஈழத்தமிழர்களுக்கு, ஹேக்கில் உள்ள நீதிமன்றத்தினால் நேற்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு விசாரணையில் ஐ.நா தேவையில்லை – பிபிசி செவ்வியில் மைத்திரி

ஐ.நா அதிகாரிகளின் தலையீடு இல்லாத உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை அடுத்த மாதத்துக்குள் நிறுவப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.