மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

வாக்கெடுப்பில் இருந்து நழுவும் சுதந்திரக் கட்சி அணி

வரவுசெலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இன்று வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

காணாமல் போனோர் பணியகத்தை மூடத் தயாரா? – சிறிலங்கா அதிபருக்கு அமைச்சர் சவால்

தனது அனுமதியின்றி 40/1  தீர்மானத்தில் கையெழுத்திடப்பட்டது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறுவாரெனின், ஜெனிவா தீர்மானத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான பணியகத்தை மூடுவதற்கு அவர் உத்தரவிட வேண்டும் என்று சிறிலங்கா அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இன்னும் அதிகம் செய்ய வேண்டும் – நோர்வே அமைச்சர்

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை ஏற்றுக் கொள்ளுகின்ற அதேவேளை, இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது என்று நோர்வேயின், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மரியன் ஹகென் தெரிவித்துள்ளார்.

நீதி, பொறுப்புக்கூறல் இல்லாமல் சிறிலங்காவில் நிலையான அமைதி ஏற்படாது – பிரித்தானியா

நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் சிறிலங்காவில் நிலையான அமைதி ஏற்படாது என்று பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவ முகாம்களுக்குள் நுழைந்து ஐ.நா குழு ஆய்வு நடத்தும்?

சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழு இன்று கொழும்பு வரவுள்ள நிலையில், இந்தக் குழுவில் உள்ள நிபுணர்கள் சிறிலங்கா இராணுவ முகாம்களுக்குச் நுழைய அனுமதி கோரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் கைதிகளே இல்லை – கைவிரித்த சிறிலங்கா அமைச்சர்

சிறைகளில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று மறுத்துள்ள சிறிலங்காவின் நீதி அமைச்சர், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் 54 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளின் மீது விரைவில் விசாரணைகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் நிரந்தர தளம் அமைக்கும் திட்டம் இல்லை – அமெரிக்கா

சிறிலங்காவுடன் இராணுவ ரீதியான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா முயற்சிக்கின்ற போதிலும், இங்கு நிரந்தரமான தளம் எதையும் அமைக்கும் திட்டம் அமெரிக்காவுக்கு கிடையாது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நடுநிலையைக் கோருகிறார் விக்கி

எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்குவதற்கு, மூன்றாம் தரப்பு நடுநிலையை தமிழர்கள் கோருவதாக, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் சரிந்துபோன கபொத சாதாரண தர தேர்வுப் பெறுபேறு

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் நடந்த கபொத சாதாரணதரத் தேர்வு பெறுபேறு நேற்று சிறிலங்கா தேர்வுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் மோசமான பெறுபேறுகளைப் பெற்றுள்ளன.

சிறிலங்காவுக்குப் பதிலடி கொடுத்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்கா தொடர்பான தமது அறிக்கையில் தவறுகள் இருப்பதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஒப்புக் கொண்டார் என்றும், இதுகுறித்து தமது அதிகாரிகளை எச்சரித்தார் என்றும், சிறிலங்கா அரச தரப்பு வெளியிட்டுள்ள கருத்துக்களை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நிராகரித்துள்ளார்.