மேலும்

சிஐடி பணிப்பாளராக ரொசான் அமரசிங்க நியமனம்

சிறிலங்கா காவல்துறை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ரொசான் அமரசிங்க, நியமிக்கப்பட்டுள்ளார்.

பணித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, காவல்துறைமா அதிபரின்  அறிவுறுத்தல்களின் பேரில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக பணியாற்றிய ஷானி அபேசேகர, பிரதி காவல்துறைமா அதிபராக பதவிக்கு பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்தே, அந்த வெற்றிடத்திற்கு, ரொசான் அமரசிங்க, நியமிக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ரொசான் அமரசிங்க தலைமைத்துவம் வகிக்கும் நிலையில்,  ஷானி அபேசேகர குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான  பிரதி காவல்துறை மா அதிபராகத் தொடர்ந்து செயல்படுவார் என்றும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *