சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு பதவி நீடிப்பு
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு ஒரு ஆண்டு சேவை நீடிப்பு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு ஒரு ஆண்டு சேவை நீடிப்பு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.
தியத்தலாவவில் உள்ள சிறிலங்கா இராணுவ பயிற்சி அகடமியில் சீனாவின் நிதியில் கட்டப்படவுள்ள அரங்க வளாகத்துக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு சீன படை அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.
போர்க்குற்ற விசாரணைகளை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா இராணுவம் தயாராக இருப்பதாக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில பாதுகாப்புத் துறையில் பரந்துபட்ட ஒத்துழைப்பும், நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதும் அவசியம் என்று பாகிஸ்தான் பிரதமர் சாஹிட் கான் அப்பாசி தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக எந்த விசாரணையும் நடத்தப்படாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 500 நடுத்தர அளவுடைய குளங்களை புனரமைப்புச் செய்யவுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை இராணுவம் வைத்திருக்க வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட யாழ். மேல் நீதிமன்றம், சிறிலங்கா இராணுவத் தளபதியை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிட்டுள்ளது.
வடக்கில் இராணுவத் தளங்களை மூடுவதற்கு மறுப்பதானது, தமிழ் மக்களை சிறிலங்கா அரசாங்கம் நம்பவில்லை என்பதையே அர்த்தப்படுத்துகிறது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்தியத் தூதரக உதவிப் பாதுகாப்பு ஆலோசகராக, லெப்.கேணல் ரவி மிஸ்ரா அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.