மேலும்

Tag Archives: நாடாளுமன்ற உறுப்பினர்

மன்னார் ஆயரிடம் மகிந்தவை மன்னிப்புக்கோர வைத்த அரச வானொலி

சிறிலங்கா அரசாங்க வானொலியில் செய்யப்பட்ட தரக்குறைவான பரப்புரைக்காக, மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகையிடம், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மன்னிப்புக் கோரியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரலகன்விலவில் மைத்திரியை குறிவைத்து துப்பாக்கிச் சூடு

பொலன்னறுவ, அரலகன்விலவில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்ட மேடை மீது இன்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மேலும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை இழக்கிறார் மகிந்த

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து மேலும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று விலகிக் கொள்ளவுள்ளதாக, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பறிபோனது

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் விலகியதை அடுத்து. சிறிலங்கா நாடாளுமன்றத்தில், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது.

ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் எதிரணியுடன் இணையவுள்ளனர்

இந்த வாரத்தில் மேலும் ஐந்து ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிரணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்தவுடன் சஜித், சம்பிக்க, கம்மன்பில சந்திப்பு – கோத்தாவும் உடனிருந்தார்

மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்போம் என்று சூளுரைத்துள்ள எதிரணித் தலைவர்களான சம்பிக்க ரணவக்க, சஜித் பிறேமதாச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நேற்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துப் பேசியுள்ளனர்.

எதிரணிக்குத் தாவினார் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் – சிறிகோத்தாவில் மைத்திரிபால

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். (இரண்டாம் இணைப்பு)

20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணியுடன் இணைய காத்திருக்கின்றனராம்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 15 தொடக்கம் 20 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறி, எதிரணியுடன் இணையவுள்ளதாக, நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை தெரிவித்துள்ளார்.

60 பேர் எதிரணிக்குக்குத் தாவுவர் – சுதந்திரக் கட்சி பொதுச்செயலராக அனுர பிரியதர்சன யாப்பா

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த சுமார் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிபர் தேர்தலில் எதிரணிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் அவசர கூட்டம் – மகிந்த ராஜபக்ச அழைப்பு

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.