இன்று புதுடெல்லி செல்கிறார் மாரப்பன – நாளை மோடி , சுஸ்மாவுடன் சந்திப்பு
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மூன்று நாட்கள் பயணமாக இன்று இந்தியா செல்கிறார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் திலக் மாரப்பன மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.