மேலும்

Tag Archives: சிறிலங்கா

கொழும்புத் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டது சீன நீர்மூழ்கி

கொழும்புத் துறைமுகத்தில் ஒரு வாரமாகத் தரித்து நின்ற சீன கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலும், போர்க்கப்பலும், நேற்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்

“சீனாவின் நீர்மூழ்கிக்கப்பலுக்கு சிறிலங்கா தனது நாட்டில் அனுமதியளித்ததானது இந்தியாவின் உயர்மட்டத்தில் பல்வேறு எதிர்க்கருத்துக்களை உருவாக்கியுள்ளது”. இவ்வாறு ‘THE TIMES OF INDIA’ ஆங்கில நாளேட்டில் Sachin Parashar எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்தவர் நித்திபாரதி.

நியாயமான விசாரணை நடத்த தவறியதால் தான் ஐ.நா விசாரணை – இரா. சம்பந்தன்

போர்க்குற்றங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் நியாயமான விசாரணைகளை நடத்தியிருந்தால், ஐ.நா மனித உரிமைகள் பேரவை விசாரணை நடத்தும் நிலை ஏற்பட்டிருக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு மரணதண்டனை: இந்திய மக்களின் உணர்வுகளை சிறிலங்காவிடம் பரிமாறியது இந்தியா

சிறிலங்கா நீதிமன்றத்தினால், தமிழ்நாட்டு மீனவர்கள் ஐவருக்கு அண்மையில், விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை குறித்து, இந்திய மக்களின் உணர்வுகளை சிறிலங்காவிடம் இந்தியா தெரியப்படுத்தியுள்ளது.

அரச செலவினம் 356 பில்லியன் ரூபாவினால் அதிகரிப்பு – வரவுசெலவுத் திட்டத்தில் திருத்தம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில், வரவுசெலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் நடந்து வரும் நிலையில், வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டுப் பிரேரணையில் சிறிலங்கா அரசாங்கம் நேற்று திருத்தங்களை முன்வைத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம்

சிறிலங்காவின் 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு, நாடாளுமன்றம் நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.

கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனி மாவட்டம் கிடையாது – சிறிலங்கா அரசு அறிவிப்பு

கிழக்கில் முஸ்லிம்களுக்குத் தனி மாவட்டத்தை அமைக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் குழுவுக்கு எந்த உரிமையும் இல்லை – சிறிலங்கா கூறுகிறது

சிறிலங்கா அரசியலமைப்பின் 18வது திருத்தச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமைகள் குழு அண்மையில் விடுத்திருந்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இந்திய – சிறிலங்கா சிறப்புப் படைகளின் கூட்டுப்பயிற்சி நாளை ஆரம்பம்

இந்திய – சிறிலங்கா இராணுவங்களுக்கு இடையிலான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ், இருநாட்டு சிறப்புப் படைப்பிரிவுகளும் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சி ஒன்று நாளை (நவம்பர் 3ம் நாள்) ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலைதேய சனநாயக பண்புகளும் சிறீலங்காவின் தற்காப்பு உத்திகளும் – 02

ஒருஅரசின் கட்டமைப்பு குறித்த முக்கியத்துவத்தையும் அதன் தேவையையும் இன்னொரு அரசினால் தெளிவாக உணர்ந்து கொள்ளமுடியும். ஏனெனில் கட்டுக்குலைந்து பிரிவினைக்கு தோல்விகண்ட அரசு இன்னொரு அரசைப்பாதிக்கும் தொற்று நோயாகவே பார்க்கப்படுகிறது. ஆகவே இந்த அரச இயந்திரங்கள் ஒன்றையொன்று பாதுகாத்து கொள்கின்றன.