சிக்கலான விடயங்களைப் பிற்போடுவதற்கு சம்பந்தன்- விக்கி சந்திப்பில் இணக்கம்
சிக்கலை ஏற்படுத்தக் கூடிய விவகாரங்களை தள்ளிப் போடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் முடிவு செய்துள்ளனர். கொழும்பில் நேற்று நடந்த சந்திப்பிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.