மேலும்

Tag Archives: கோத்தாபய ராஜபக்ச

நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்குகிறார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் அரசியலில் நுழையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலிகளிடம் மீட்ட ஆயுதங்கள் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுக்கு விற்பனை?

விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் ஆபிரிக்காவில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு விற்பனை செய்யப்பட்டதா என்பது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கோத்தாவிடம் 2 பில்லியன் ரூபா மானநட்டம் கோருகிறார் ரவி கருணாநாயக்க

தனக்கெதிராக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட ‘பொய்யான குற்றச்சாட்டு’ தொடர்பில் நட்டஈடாக இரண்டு பில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக சிறிலங்காவின் தற்போதைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கோத்தாவுக்கும் பீல்ட் மார்ஷல் பதவிஉயர்வு வழங்கக் கோருகிறது பொது பலசேனா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று பொது பலசேனவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகளே மகிந்தவை தோற்கடித்தன – என்கிறார் கோத்தா

சிறிலங்காவில் மகிந்த ராஜபக்ச ஆட்சியை அகற்றுவதில் வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவுகளின் தலையீடுகள் இருந்துள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோத்தா, அட்மிரல் சோமதிலக திசநாயக்க உள்ளிட்டோர் வெளிநாடு செல்லத் தடை

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் சோமதிலக திசநாயக்க உள்ளிட்ட நால்வர் வெளிநாடு செல்வதற்கு காலி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

மிதக்கும் ஆயுதக் களஞ்சிய விசாரணையை இடைநிறுத்த 300 மில்லியன் ரூபா இலஞ்சம்

காலி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட, மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பான விசாரணைகளை இடைநிறுத்தி வைப்பதற்கு, முக்கிய அமைச்சர் ஒருவருக்கு 300 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக கொடுக்க, குறிப்பிட்ட கடல் பாதுகாப்பு நிறுவனம் முயன்றதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார்.

வெள்ளைவான் கடத்தல்களில் ஈடுபட்டது இராணுவ அதிகாரிகளே- முன்னாள் காவல்துறை பேச்சாளர்

வெள்ளைவான் கடத்தல்களின் பின்னணியில் இருந்தவர்கள் குறித்த தகவல்கள் தம்மிடம் உள்ளதாகவும், அதுபற்றிய விசாரணை ஒன்று நடத்தப்பட்டால், அதில் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிடத் தயாராக இருப்பதாகவும், முன்னாள் சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்தார்.

கொலை அச்சுறுத்தல் விடுத்தார் கோத்தா – முன்னாள் காவல்துறை பேச்சாளர் பரபரப்பு செவ்வி

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் கொலை அச்சுறுத்தலினால் தான், நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக, சிறிலங்காவின் முன்னாள் காவல்துறைப் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

கோத்தாவிடம் இரண்டு மணி நேரம் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம், சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.