சிறிலங்கா அரசியலில் நாம் தீர்மானிக்கும் சக்தியாக விளங்க முடியும்- மன்னார் ஆயர் சார்பாக அறிக்கை
தமிழ்த் தேசிய நலன்களை முன்னிறுத்தக் கூடிய பிரதிநிதிகளை தெரிவு செய்வதன் மூலம், சிறிலங்கா அரசியலில் நாம் தீர்மானிக்கும் சக்தியாக விளங்க முடியும் என்று மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகையின் சார்பாக- மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் ஏ.விக்டன் சோசை அடிகளார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.