மேலும்

Tag Archives: அமைச்சரவை

ஆரவாரமின்றி இன்று காலை பிரதமராக பதவியேற்கிறார் ரணில்

சிறிலங்கா பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் 10.30 மணிக்குப் பதவியேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிபர் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இராஜாங்க, பிரதி அமைச்சர்களுக்கு வேட்டு வைத்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அரசாங்கத்தில் தற்போது, இராஜாங்க அமைச்சர்களோ, பிரதி அமைச்சர்களோ பதவியில் இல்லை என்று, அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

விகிதாசார முறையில் மாகாணசபைத் தேர்தல் – அமைச்சரவை முடிவு

பழைய முறைப்படியே மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது என்று சிறிலங்கா அமைச்சரவை முடிவு செய்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று நாடு திரும்பும் சிறிலங்கா அதிபர் – இறுக்கமான முடிவுகளை எடுப்பார்?

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் இன்று அதிகாலை நாடு திரும்பியதும், அடுத்து வரும் வாரங்களில், அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட இறுக்கமான பல அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம்

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக உருவாக்கப்பட்டுள்ள, பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.

ரஷ்யாவுடன் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான செயலணிக் குழுவை உருவாக்க அனுமதி

ரஷ்யாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில், இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டு செயலணிக் குழுக்களை உருவாக்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

தேவைப்பட்டால் மாத்திரம் ஊடக மாநாட்டில் இராணுவப் பேச்சாளர் பங்கேற்பார்

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில், இராணுவப் பேச்சாளர், தேவைப்பட்டால் மாத்திரமே பங்கேற்பார் என்று,  சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

ஊடக மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா இராணுவப் பேச்சாளருக்குத் தடை

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் பங்கேற்க, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவுக்கு, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தடைவிதித்துள்ளார்.

522 ஏக்கர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா இராணுவத்துக்கு 866.71 மில்லியன் ரூபா

வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படையினர் வசமிருந்த 522 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.