மேலும்

பாரீசில் புலம்பெயர் தமிழர் திருநாள் -2016

தமிழர் திருநாளை முன்னிட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் “புலம்பெயர் தமிழர் திருநாள் 2016” நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

இரு நீதிவான்களின் இடமாற்றங்கள் ரத்து – நீதிச்சேவைகள் ஆணைக்குழு நடவடிக்கை

பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த கொழும்பு பிரதம நீதிவான் கிகன் பிலபிட்டிய மற்றும் கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் ஆகியோரின் இடமாற்றங்களை ரத்துச் செய்ய சிறிலங்காவின் நீதிச் சேவைகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

பிரகீத் கடத்தல் – மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரியும் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்ற குழுவில் இடம்பெற்றிருந்த மற்றொரு சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரியை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை – சிறிலங்கா அரசு

அரசியலமைப்புத் திருத்தம், ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளும் வகையிலேயே மேற்கொள்ளப்படும் என்றும், சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் பிரதி அமைச்சர் அஜித் பெரேரா.

வலி.வடக்கில் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க முடிவு – பொங்கலுக்கு முன் மீள்குடியேற்றம்

வலி.வடக்கு பிரதேசத்தில் சிறிலங்கா படையினர் வசம் உள்ள 700 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.

பெப்ரவரிக்கு முன் சிறிலங்கா வருவார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குள் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு – அடுத்த ஆண்டில் பேச்சு நடத்தவுள்ளது சீனா

சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்து கொள்வது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் அடுத்த ஆண்டு பேச்சு நடத்தப்படும் என்று சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் முக்கிய ஜனநாயக வெற்றி கிடைத்த ஆண்டு – ஜோன் கெரி

2015ஆம் ஆண்டு சிறிலங்காவிலும் உலகின் ஏனைய சில நாடுகளிலும், மிகவும் முக்கியமான ஜனநாயக வெற்றிகள் கிடைத்திருப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

அப்போது ஆயுதங்களுடன் போராடியவர்கள் இப்போது பசி வேதனையுடன் போராடுகின்றனர்

போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்த போதிலும் தற்போதும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இவர்கள் சாதாரண மக்களாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதே மிகப் பாரிய பிரச்சினை. 

சித்தார்த்தனிடம் விளக்கம் கேட்க கோருகிறார் மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுமதியின்றி, தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் பங்கெடுத்தது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.