சீனப் பயணத்தை திடீரென ஒத்திவைத்தார் மகிந்த
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, அடுத்த வாரம் சீனாவுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணத்தை திடீரென ஒத்திவைத்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, அடுத்த வாரம் சீனாவுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணத்தை திடீரென ஒத்திவைத்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, யோசித ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
டட்லி – செல்வா, பண்டா- செல்வா உடன்பாடுகளை நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தால், வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒருவர், உருவாகியிருக்கமாட்டார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்திய – சிறிலங்கா கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க அடுத்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் யாழ்ப்பாணத்துக்கும் செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அரசின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவதற்காக இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் வரும் 12ஆம் நாள் கொழும்பு செல்லவுள்ளார்.
சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில், தனது துறைமுகங்களை உருவாக்கும் சீனாவின் திட்டம் தொடர்பாக, அமெரிக்க- இந்தியக் கடற்படைத் தளபதிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளில், நோர்வே முன்னரைப் போன்று எந்தப் பங்கையும் வகிக்காது என்று, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரெண்டே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் தீர்மானத்தை நிறைவேற்றும் நடவடிக்கை வரும் 12ஆம் நாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று காலை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹருணிகா பிரேமச்சந்திர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்காவின் புதிய அரசாங்கம் உள்நாட்டுப் போரின் பின்னான நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்தமை தொடர்பில் பாராட்டத்தக்க நிலையிலேயே இருப்பினும், அங்கு வாழும் மக்கள் தற்போதும் பல்வேறு சித்திரவதைகள் மற்றும் மீறல்களுக்கு உட்படுவதாக தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.