மேலும்

கொழும்பு வந்தார் இந்திய வெளிவிவகாரச் செயலர்

இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர்  ஒரு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு இன்று முற்பகல் சிறிலங்காவை வந்தடைந்தார்.

சிறிலங்கா இராணுவத் தளபதியை கைது செய்ய முடியும் – ஹோமகம நீதிவான் எச்சரிக்கை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காவிடின், சிறிலங்கா இராணுவத் தளபதியை கைது செய்து அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய முடியும் என்று ஹோமகம நீதிவான் தெரிவித்துள்ளார்.

கடல் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஜப்பான் – சிறிலங்கா உயர்மட்டப் பேச்சு

பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, சிறிலங்காவும், ஜப்பானும், இன்று உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளன.

‘ஒற்றையாட்சி’யில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை – சிறிலங்கா அமைச்சர்

ஒற்றையாட்சி விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்றும், புதிய அரசியலமைப்பில் அதனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

அடுத்தமாத முற்பகுதியில் சிறிலங்கா வருகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அடுத்த மாத முற்பகுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவுக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி  சுபினே நந்தி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

வடக்கு,கிழக்கை இணைக்கவோ, 13க்கு அப்பால் செல்லவோ அனுமதியோம் – சிறிலங்கா சுதந்திரக் கட்சி

அரசியலமைப்பு மாற்றத்தின்போது, 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரங்களைப் பகிரவோ, வடக்கு கிழக்கை இணைக்கவோ சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் அனுமதிக்காது என்று, அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து அனுமதிக்கும் சிறிலங்கா – பிரித்தானிய ஊடகம்

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்ற மீறல்கள் தொடர்பான உள்ளக விசாரணை பக்கச்சார்புடையதாகவும் வினைத்திறனற்றதாகவும் காணப்பட்ட போதே அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது.

இராணுவக் கட்டளை அமைப்பில் மாற்றம்- டிவிசன் தளபதியாக கீழ் இறக்கப்பட்டார் சவேந்திர சில்வா

சிறிலங்கா இராணுவக் கட்டளை அமைப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள அதேவேளை, போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா 53ஆவது டிவிசனின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

எங்கிருந்து போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதென்று தீர்மானி்க்கவில்லையாம்

பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானங்கள் எதையும் வாங்குவதற்கு இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சி அரசியலமைப்பே உருவாக்கப்படும் – சிறிலங்கா அமைச்சர் கூறுகிறார்

புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஒற்றையாட்சிக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும் என்று சிறிலங்காவின் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும், நாடாளுமன்ற அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.