மேலும்

இந்தியாவுடனான உறவை எதிர்க்கும் நவீன பாசிசவாதிகள் – மங்கள சமரவீர

சிறிலங்காவில் உள்ள ‘நவீன பாசிசவாதிகள்’ தான் இந்தியாவுடனான நெருக்கமான உறவை எதிர்ப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மிக்-27 போர் விமானங்கள், எம்.ஐ.24 தாக்குதல் உலங்குவானூர்திகள் அணிவகுப்பில் இருந்து நீக்கம்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றிய மிக்-27 போர் விமானங்களோ, எம்.ஐ-24 தாக்குதல் உலங்குவானூர்திகளோ இம்முறை சிறிலங்காவின் சுதந்திர நாள் அணிவகுப்பில் பங்கேற்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளுக்கு நிதிசேகரித்த இலங்கைத் தமிழருக்கு ஜேர்மனி நீதிமன்றம் சிறைத்தண்டனை

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்து, நிதி சேகரித்துக் கொடுத்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவருக்கு, ஜேர்மனி நீதிமன்றம் 18 மாத கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அதிபர் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் அதிகரிப்பு

பாரிய நிதி மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும், அதிபர் ஆணைக்குழுவுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த முதலாம் நாள் வெளியிட்டுள்ளார்.

மைத்திரி வெளியேறிய போதே சுதந்திரக் கட்சி உடைந்து விட்டது – மகிந்த

சிறிலங்கா சுதந்திரக் கட்சி 2014ஆம் ஆண்டு நொவம்பர் 21ஆம் நாளே பிளவுபட்டு விட்டது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்புக்கூற அரசியலமைப்பில் இடமில்லை – சிறிலங்கா பிரதமர்

வெளிநாட்டு நீதிபதிகள், தீர்ப்புகளை வழங்குவதற்கு சிறிலங்காவின் அரசியலமைப்பில் இடமளிக்கப்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவைக் கலைக்க வேண்டும் – நிமால் சிறிபால டி சில்வா

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவை உடனடியாக கலைத்து விட வேண்டும் என்று, சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா  தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை உணவைச் சாப்பிட மறுக்கும் யோசித ராஜபக்ச

நிதிமோசடிக் குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, யோசித ராஜபக்ச உள்ளிட்ட நால்வர், சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவை உண்ண மறுப்பதாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

அபேராம விகாரையில் அரசியல் கூட்டங்கள் நடத்த நீதிமன்றம் தடை

நாரஹேன்பிட்டி அபேராம விகாரையில், அரசியல் கூட்டங்களையோ, அல்லது வர்த்தக கூட்டங்களையோ நடத்துவதற்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று தடைவிதித்துள்ளது.

அடுத்து கம்பி எண்ணப்போவது தானே என்கிறார் மகிந்த

அடுத்ததாக தன்னையே அரசாங்கம் கைது செய்யவுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று, தலதா மாளிகையில் வழிபாடு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.