எல்லாக் கேள்விகளுக்கும் இன்று பதிலளிப்பேன் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
எல்லாக் கேள்விகளுக்கும் இன்று தான் பதிலளிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.