மேலும்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சிறிலங்காவின் உள்ளக விவகாரங்களில் அத்துமீறல் – பீரிஸ்

சிறிலங்காவின் உள்ளக விவகாரங்களில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அத்துமீறியுள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

14 முன்னாள் புலிகள் புனர்வாழ்வுக்கு செல்ல மறுப்பு

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான 14 பேர், புனர்வாழ்வுக்குச் செல்வதற்கு நீதிமன்றத்தில் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

ஆக்ராவில் இருந்து மாத்தறை வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்க இந்தியா திட்டம்

இந்தியாவின் ஆக்ராவில் இருந்து சிறிலங்காவின் மாத்தறை வரை தேசிய நெடுஞசாலை ஒன்றை அமைக்கும் புதிய திட்டத்தை இந்தியாவின் நெடுஞ்சாலைகள் மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

பௌத்த குருமார் தொடர்பான சட்டமூலத்தை நிறைவேற்ற பொதுவாக்கெடுப்பு – சிறிலங்கா உயர்நீதிமன்றம்

சிறிலங்கா அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பௌத்த குருமார் தொடர்பான ‘தேரவாதி கதிகாவத்’ சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு 31 மில்லியன் டொலர் நிதியுதவி – அமெரிக்கா அறிவிப்பு

சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகள் மற்றும் ஊழல் எதிர்ப்புச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில், 31 மில்லியன் டொலர் (சுமார் 4350 மில்லியன் ரூபா) நிதியுதவியை வழங்கும் திட்டம் ஒன்றை, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, முன்வைத்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் கப்பல்களைப் பழுதுபார்க்கும் தளத்தை அமைக்கிறது சீனா

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல்களைப் பழுதுபார்க்கும் தளம் ஒன்றை அமைப்பதற்கு சீனா முன்வந்திருப்பதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் புதிய யதார்த்தம் – கலாநிதி க. முகுந்தன்

இலங்கை இன்று ஒரு மாறிவரும் நாடாகத் தோன்றுகிறது. எம்மில் சிலர் இவ் வரசாங்கத்தின் நேர்மைத்தன்மை பற்றி, அல்லது அங்கு இடம்பெறுவதாய்த் தோன்றும் மாற்றங்கள் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்கள்.

காணாமற்போனவர்கள் அனைவரும் இறந்து விட்டனர்- உறுதிப்படுத்துகிறார் கோத்தா

காணாமற்போனவர்களில் சிலர் கனடாவிலும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் வாழ்வதாகவும், ஏனையோர் அனைவரும் இறந்து விட்டனர் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச.

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்குமாறு ஐ.நா கோரமுடியாது – மனித உரிமை ஆணையாளர்

தடுப்புக்காவலில் உள்ள அரசியல் கைதிகளுக்கு, பொதுமன்னிப்பு அளிக்கும்படி ஐ.நாவினால் கோர முடியாது என்றே தாம் குறிப்பிட்டதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக நீதிபதிகளின் பங்களிப்புக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்காது – செயிட் ராட் அல் ஹுசேன்

போர்க்குற்ற விசாரணைகளில், அனைத்துலக நீதிபதிகளின் பங்களிப்பை ஏற்றுக் கொள்ளுமாறு சிறிலங்காவுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்காது என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.