மேலும்

கோத்தாவின் நுழைவும் கொஸ்கம பேரழிவும் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

தாஜூதீனின் படுகொலை தொடர்பாக உதவிக் காவற்துறை மா அதிபர் அனுர சேனநாயக்க கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் ராஜபக்சாக்களின் சட்டவாளர்களுடன் கோத்தபாயவின் வீட்டில் சிறப்புக் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

போர்க்குற்ற விசாரணையில் சாட்சியமளிக்க முன்னாள் புலிகள் விருப்பம்

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள இடைக்கால நீதிப் பொறிமுறைகளில், சாட்சியமளிக்கத் தயார் என்று, ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

பொறுப்புக்கூறல் விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை – சிறிலங்கா அதிபர்

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொறுப்புக்கூறும் விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகள் எமக்குத் தேவையில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சலாவ வெடிவிபத்தினால் 500 கோடி ரூபாவுக்கு மேல் இழப்பு – சிறிலங்கா இராணுவத் தளபதி

கொஸ்கம-சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வெடிவிபத்தினால், சிறிலங்கா இராணுவத்துக்கு, 500 கோடி ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த வெடிபொருட்களே நாசம் – வலுக்கிறது சந்தேகம்

சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்படவிருந்த வெடிபொருட்களே சலாவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் நாசமாகியதாக, சிறிலங்கா இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி, சிங்கள ஊடகமான “ராவய” செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா கடற்படைக்காக இந்தியா கட்டிய ரோந்துக் கப்பல் கோவாவில் வெள்ளோட்டம்

சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டுள்ள முதலாவது, ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.

வடக்கில் இருந்து படைமுகாம்களை அகற்றக் கூடாது – உதய கம்மன்பில

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக, சிறிலங்கா இராணுவ முகாம்களை அகற்றக் கூடாது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மேலதிக வெடிபொருட்களை வெளிநாடுகளுக்கு விற்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு

சிறிலங்கா படைகளின் தேவைக்கு அதிகமாக உள்ள வெடிபொருட்களை விற்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல இரத்நாயக்க தெரிவித்தார்.

சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும்- சம்பந்தன்

வடக்கு கிழக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகள் அனைத்தும் உடனடியாக திரும்பக் கையளிக்கப்பட  வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மகிந்த வாக்களிக்காததன் மர்மம் – விளக்குகிறார் கம்மன்பில

தனது பொன்னான நேரத்தைச் செலவிடுவதற்கு பெறுமதியற்றது என்பதால் தான், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்கவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.