மேலும்

சிறிலங்கா படைகளுக்கு நவீன போர்த்தளபாடங்களை வழங்குகிறது ரஷ்யா

சிறிலங்கா படைகளுக்கு சில நவீன போர்த்தளபாடங்களை ரஷ்யா வழங்கவுள்ளதாக, சிறிலங்காவுக்கான ரஷ்யத் தூதுவர் அலெக்சான்டர் கர்சாவா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா விமானப்படையிடம் இருந்து கைமாறியது மட்டக்களப்பு விமான நிலையம்

சிறிலங்கா விமானப்படையின் வசம் இருந்து வந்த மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

ராஜ் ராஜரத்தினத்துக்கு நிபுணத்துவ உதவிகளையே வழங்கினேன் – சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர்

உள்ளக பங்கு வர்த்தக மோசடிக் குற்றச்சாட்டில் அமெரிக்காவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள, இலங்கைத் தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரத்தினத்துக்கு தாம் நிபுணத்துவ சேவைகளை மாத்திரமே வழங்கியதாக சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

‘சிறிலங்காவின் குத்துக்கரணம்’ – பிரபல இந்திய ஊடகவியலாளரின் பார்வை

சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களுடன் நல்லுறவைப் பேணிவரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்தும் சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணை தொடர்பாக அமைதி காத்து வருகிறார். இவர் இந்த விடயம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாக வரையறுக்க வேண்டும்.

பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து சுஸ்மாவுடன் பேசினார் மலிக் சமரவிக்கிரம

புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

லசந்த படுகொலை – சந்தேக நபர்களின் படங்களை மீண்டும் வெளியிட்டது சிறிலங்கா காவல்துறை

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பேரின் மாதிரிப் படங்களை சிறிலங்கா காவல்துறை தலைமையகம் மீண்டும் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் எட்கா உடன்பாடு – இந்திய, சிறிலங்கா அமைச்சர்கள் இணக்கம்

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டை (எட்கா) செய்து கொள்வது தொடர்பாக, விரைவாக பேச்சுக்களை நடத்தி, இந்த ஆண்டு இறுதிக்குள், முடிவை எட்டுவதற்கு, இந்தியாவும் சிறிலங்காவும் இணங்கியுள்ளன.

போரில் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் சட்டவிரோதமானது அல்ல – பரணகம

சிறிலங்கா இராணுவத்தினர் கொத்தணிக் குண்டுகளைப் போரில் பயன்படுத்தியதற்கு நம்பகமான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ள, காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம, 2010ஆம் ஆண்டுக்கு முன்னர் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் அது சட்டவிரோதமானது அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களை சிறைக்கூண்டுக்குள் அடைத்தார் சிறிலங்கா அதிபர்

புதிதாகத் திறந்து வைத்த மாத்தறை மாவட்ட மதுவரித் திணைக்கள கண்காணிப்பாளர் பணியகத்தில், சந்தேக நபர்களை அடைத்து வைப்பதற்கான அமைக்கப்பட்டுள்ள இரும்புக்கூண்டுக்குள், அமைச்சர்களை அடைத்து வைத்தார் சிறிலங்கா அதிபர் மைத்திரி்பால சிறி்சேன.

வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் ஜோர்ஜ் மாஸ்டர்

விடுதலைப் புலிகள் அரசியல்துறையில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய ஜோர்ஸ் மாஸ்டருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கை, கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.