மேலும்

சிறிலங்கா படைகளுக்கு அபிவிருத்தி செயற்பாடுகளில் முக்கிய இடம் – அமைச்சரவை அங்கீகாரம்

நாட்டைக் கட்டியெழுப்பும், அமைதியைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளில், சிறிலங்கா படைகளை காத்திரமான வகையில் ஈடுபடுத்துவதற்கு சிறிலங்காவின் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்காக, சிவில் – இராணுவ ஒருங்கிணைப்பு அமைப்பு ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது.

பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றார் தெரசா மே

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் நேற்று முறைப்படி பதவி விலகியதையடுத்து, அந்த நாட்டின் புதிய பிரதமராக, தெரசா மே பதவியேற்றார்.

சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுப்போம் – கூட்டமைப்பிடம் நிஷா பிஸ்வால் உறுதி (படங்கள்)

அனைத்துலக சமூகத்துக்கு சிறிலங்கா வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.

வட-கிழக்கின் முதல்வராக முஸ்லிம் ஒருவரை ஏற்கவும் தயார் – இரா.சம்பந்தன்

இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக, படித்த, பக்குவமான முஸ்லிம் ஒருவரை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ரூபவாஹினி சமையல் நிகழ்ச்சியில் நிஷா பிஸ்வால்

மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், சிறிலங்காவின் அரச தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் இன்று பங்கேற்றார்.

தகவல் உரிமைச் சட்டத்தை சாத்தியமாக்கியதற்கு நிஷா பிஸ்வால் பாராட்டு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தகவல் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டமைக்கு, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் பாராட்டுத் தெரிவித்தார்.

பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும் – ஐ.நா

பொறுப்புக்கூறல் தொடர்பான வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறல் பொறிமுறை நம்பிக்கை அளிப்பதாக இருக்க வேண்டும் – அமெரிக்கா

பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் பொறிமுறை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்க வேண்டியது அவசியம் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம், அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்கள் நிஷா பிஸ்வால் மற்றும் ரொம் மாலினொவ்ஸ்கி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பரணகமவின் அதிமேதாவித்தனமும் கொத்தணிக் குண்டு சர்ச்சையும்

காணாமற் போனோர் தொடர்பாக விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகமவினால் கடந்த வாரம் விடுக்கப்பட்ட அறிக்கையானது போர்க் காலத்தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் புதியதொரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வெளிநாட்டுப் பங்களிப்பு என்பது வெளிநாட்டு நீதிபதிகள் அல்லவாம் – மங்கள சமரவீர குத்துக்கரணம்

விசாரணைப் பொறிமுறைகளில் வெளிநாட்டுப் பங்களிப்பைப் பெறுவதென்பது, வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதாக அர்த்தமாகாது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.