திவிநெகும நிதி மோசடி – பசிலுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்
திவிநெகும நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.