ஏனைய பல்கலைக்கழகங்களுக்கும் மோதல் பரவலாம் – துணைவேந்தர்களுக்கு எச்சரிக்கை
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதலைப் போன்று, ஏனைய பல்கலைக்கழகங்களிலும் மோதல்கள் ஏற்படலாம் என்பதால், துணைவேந்தர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.