மேலும்

திருப்பதியில் சிறிலங்கா அதிபரை நிர்க்கதியாக நிற்க விட்ட சாரதி

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் நேற்று வழிபாடு நடத்தச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கார் சாரதி காணாமற்போனதால், 12 நிமிடங்களுக்கு மேலாக காரில் காத்திருக்க நேரிட்டது.

காரைநகரில் 285 மில்லியன் ரூபா செலவில் படகு கட்டுமானத் தொழிற்சாலை

காரைநகரில் 285 மில்லியன் ரூபா செலவில் படகுக் கட்டுமானத் தொழிற்சாலை ஒன்றை சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சினால் அமைக்கப்படவுள்ளது.

மோடியின் வழியில் அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டைப் புறக்கணிக்கிறார் சிறிலங்கா அதிபர்

வெனிசுவேலாவின் கராகஸ் நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் புர்கா, நிஜாப் உடைகளுக்கு தடை – தேசிய பாதுகாப்புச் சபையில் ஆலோசனை

முஸ்லிம் பெண்கள் உடல் முழுவதையும் மறைக்கும் புர்கா மற்றும் நிஜாப் உடைகளை அணிவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

மென்சக்தியின் செல்வாக்கு குறித்து ஆராய்கிறது சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கு

சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்குத் தொடரில், இந்த ஆண்டுக்கான கருத்தரங்கு, எதிர்வரும் செப்ரெம்பர் 1ஆம் நாள் ஆரம்பமாகவுள்ளது.

போரின் இறுதியில் அனைத்துலக மனிதாபிமானச் சட்ட மீறல்கள் இடம்பெற்றன – பரணகம ஆணைக்குழு

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான சில குற்றச்சாட்டுகள் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு முரணாக இருப்பதால், நம்பகமான உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்ளத் தவறினால், ஐ.நாவின் நேரடித் தலையீட்டுக்கு வழிவகுக்கக் கூடும் என்று காணாமற்போனோர் குறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

மைத்திரி – ரணில் பிரிவு எந்த இடத்தில் சாத்தியம்? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

அப்போதைய ஐ.தே.க தலைவர் டி.எஸ்.சேனநாயக்காவுடன் உடன்படிக்கை செய்து கொண்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, 1947 ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். டி.எஸ் சேனநாயக்க வயதில் மூத்தவர்.   முதலாவது பிரதமராகும் அவரைத் தொடர்ந்து தான் பிரதமர் பதவிக்கு வரலாம் என பண்டாரநாயக்க கருதினார்.

நாடாளுமன்ற ஆசனங்களையும் இழக்க நேரிடும் – மைத்திரி எச்சரிக்கை

கட்சியின் ஒழுக்கத்தை மீறி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முனைபவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

பெருநகர அபிவிருத்தி, துறைமுக கட்டுமான நிபுணத்துவ உதவிகளை வழங்க சீனா இணக்கம்

பெருநகர மற்றும் துறைமுக கட்டுமானம் தொடர்பான தமது நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களை சிறிலங்காவுக்கு வழங்க, சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் குழுமத்தின் தலைவர் லி ஜியான்ஹோங் இணங்கியுள்ளார்.

முன்னாள் போராளிகளை பரிசோதிக்க அமெரிக்க மருத்துவர்கள் – அரசாங்கம் நிராகரிப்பு

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளைப் பரிசோதனை செய்வதற்கு அமெரிக்க மருத்துவர்கள் தேவையில்லை என்று, சிறிலங்காவின் சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.