ஜனவரி 26ஆம் நாள் கொல்லப்படுவாரா சிறிலங்கா அதிபர்? – விசாரணை ஆரம்பம்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்யும் சதித் திட்டம் ஒன்றுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மீது தாக்குதல் நடத்திய முன்னாள் கடற்படைச் சிப்பாய் விஜிதமுனி ரோகண தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.