மேலும்

சீனாவுக்கு வழங்கப்படவுள்ள 15 ஆயிரம் ஏக்கரில் 95 வீதம் அரச காணிகள்

அம்பாந்தோட்டையில் சிறப்பு பொருளாதார வலயத்தை உருவாக்குவதற்கு சீனாவுக்கு வழங்கப்படவுள்ள 15 ஆயிரம் ஏக்கர் காணிகளில், 90 – 95 வீதமான காணிகள், அரச காணிகளே என்று சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக, அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

முன்னாள் படை அதிகாரிகளுக்கு சிறிலங்கா அதிபர் வாக்குறுதி

புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு தேசிய பாதுகாப்புக்கு விரோதமானதாக இருக்காது என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உறுதி அளித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை இராணுவத் தேவைக்கு பயன்படுத்த முடியாது

அம்பாந்தோட்டை துறைமுகம் சிறிலங்கா கடற்படை தவிர்ந்த வேறெந்த கடற்படையினாலும், இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் சிறிலங்கா பிரதமர்

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று திருப்பதி சென்றடைந்துள்ளார்.

சிறிலங்காவிடம் அதிருப்தியை வெளியிட்டது சீனா

அம்பாந்தோட்டையில் காணிகளை அபகரிக்க சீனா முனைவதாக, மேற்கொள்ளப்படும் பரப்புரைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் சீன அரசாங்கம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்காவுக்கு போர்க்கப்பல் வழங்குகிறது ஜப்பான்

சிறிலங்கா கடற்படைக்கு கப்பல் ஒன்றை வழங்குவதற்கு ஜப்பானிய  அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜப்பானின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் ஹிரோயுகி மியாசாவா, இதனைத் தெரிவித்துள்ளார் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள சிறிலங்காவின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

சட்டவாளர்களின் பிரசன்னமின்றி ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதற்கு அனுமதித்தல் உள்ளடங்கலாக பல்வேறு மாற்றங்களைக் கொண்டுள்ள, சிறிலங்கா அரசாங்கத்தால் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பாக ஐ.நா  அதிருப்திகளை வெளியிட்டுள்ளதாக சிறிலங்காவிற்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி உனா மக்காலி தெரிவித்தார்.

ஆட்சிமாற்றத்தை ஆதரித்தமைக்காக இந்தியா வருந்த வேண்டும் – என்கிறார் கோத்தா

மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம் சீனாவுடன் கூட்டாக இணைந்து செயற்படுவது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நிச்சயம் குழப்பத்துக்கு உள்ளாக்கியிருக்கும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜப்பான்- சிறிலங்கா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல்

ஜப்பான்- சிறிலங்கா  பாதுகாப்பு ஒத்துழைப்புக் கலந்துரையாடல் நேற்று கொழும்பில் உள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவின் அழைப்பின் பேரில், ஜப்பானிய பாதுகாப்பு உயர்மட்டக் குழுவொன்று இந்த கலந்துரையாடலில் பங்கேற்றது.

ஜனவரி 6 முதல் நாளாந்தம் ஏழரை மணிநேரம் மூடப்படுகிறது கட்டுநாயக்க விமான நிலையம்

சிறிலங்காவின் பிரதான அனைத்துலக விமான நிலையமான, பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் அனைத்துச் செயற்பாடுகளும், எதிர்வரும் ஜனவரி 6ஆம் நாள் தொடக்கம், காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணி வரை மூடப்படவுள்ளது.