மேலும்

ஜெனிவாவில் மற்றொரு தீர்மானமா? – சிறிலங்கா நிராகரிப்பு

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான மற்றொரு தீர்மானத்தை முன்வைக்கும் முயற்சிகளைப் பிற்போடச் செய்வதற்காக, அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்த அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த வொசிங்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் உடன்பாடு – இந்தவாரம் இறுதி முடிவு

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையையும், கைத்தொழில் வலயத்தை அமைப்பதற்காக 15 ஆயிரம் ஏக்கர் காணிகளையும் சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான உடன்பாடு, இந்த வாரம் இறுதி செய்யப்படும் என்று குளோபல் போர்ட்ஸ் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் சூரிய சக்தி மின் திட்டங்களில் ஜப்பான் 15 மில்லியன் டொலர் முதலீடு

சிறிலங்காவில் சூரிய சக்தி மின் திட்டங்களில் 15 மில்லியன் டொலரை முதலீடு செய்வதற்கு மூன்று ஜப்பானிய நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்தவின் குடியுரிமையைப் பறிக்கும் முடிவு எடுக்கப்படவில்லை – ராஜித சேனாரத்ன

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் குடியுரிமையைப் பறிக்கும் முடிவு எதையும், சிறிலங்கா அரசாங்கம் எடுக்கவில்லை என்று அமைச்சர ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சீனாவின் முதலீடுகள் சிறிலங்காவுக்குத் தேவை – ரணில்

சீனாவின் முதலீடுகள் சிறிலங்காவுக்குத் தேவைப்படுவதால், சீன முதலீட்டாளர்களை வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

சுமந்திரனைக் கொல்லும் திட்டம் பிரான்சில் தீட்டப்பட்டதாம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப்  படுகொலை செய்வதற்கான திட்டம், பிரான்சில் தீட்டப்பட்டதாக, விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கலகங்களை அடக்க சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையில் புதிய பிரிவு

சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையில், கலகம் அடக்கும் புதிய பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கண்ணீர் புகைக்குண்டுகளைப் பயன்படுத்தி கலகம் அடக்கும் நடவடிக்கைகளில், ஈடுபடுத்துவதற்காக இந்த சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

தீர்வையற்ற வாகனங்களை விற்பனை செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விபரம் வெளியானது

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரிச்சலுகையைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வேறு நபர்களுக்கு கைமாற்றம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

பொறுப்புக்கூறலில் வேகமில்லை – ரணிலை எச்சரித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரங்களில், சிறிலங்கா மெதுவாகவே செயற்படுவதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்,கவலை வெளியிட்டுள்ளார்.

சீன இராணுவத் தளங்களுக்கு சிறிலங்காவில் இடமில்லை – சிறிலங்கா தூதுவர்

சிறிலங்காவில் எந்தவொரு துறைமுகத்திலும் இராணுவத் தளங்களை அமைப்பதற்கு சீனாவுக்கு இடமளிக்கப்படாது என்று சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.